ரேஷன் கடைகளுக்கு 2000 பணியாளர் தேர்வு.! எந்த தேர்வும் இல்லை- நேரடி நியமனம் - வெளியான முக்கிய அறிவிப்பு

First Published Oct 9, 2024, 9:07 AM IST

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 2000 விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்காக கல்வி தகுதி மற்றும் விண்ணப்பிக்க கடைசி நாள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு

பல லட்சம் இளைஞர்கள் ஆண்டு தோறும் கல்லூரி, டிப்ளமோ மற்றும் பள்ளி படிப்பை முடித்து வெளியே வருகின்றனர். அந்த வகையில் தமிழக அரசு சார்பாக பல்வேறு வகையில் வேலைவாய்ப்பு வழங்கி வருகிறது. குறிப்பாக அரசு பணியில் சேர விரும்புபவர்களுக்கு அரசு பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு நடத்தப்பட்டு பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

மேலும் தனியார் நிறுவனங்கள் மூலமாகவும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வேலை வாய்ப்பு முகாம் நடத்தி லட்சக்கணக்கான பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். மேலும் சொந்த தொழில் செய்ய விரும்புபவர்களுக்கு பேக்கரி, டிஜிட்டல், யூடியூப், வீட்டு உபயோக பொருட்கள் உற்பத்தி தொடர்பாக பயிற்சி அளித்து கடனுதவியும் வழங்கப்பட்டு வருகிறது.

ரேஷன் கடைகளில் காலிபணியிடம்

மேலும் அரசு அலுவலகங்களில் ஒரு சில பணியிடங்கள் ஒப்பந்தம் அடிப்படையிலும் நிரப்பப்பட்டு வருகிறது. குறிப்பாக மாநகராட்சி, மாவட்ட மருத்துவமனைகளில் பணியாளர் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்களில் காலியாக உள்ள விற்பனையாளர்கள் (Salesman) மற்றும் கட்டுநர்கள் (packer) காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி,  2000 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கூட்டுறவுத்துறையின் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் வெளியாகியுள்ளது.

Latest Videos


பணியாளர் நேரடி நியமனம்

இந்த காலிப்பணியிடங்களுக்கு எந்தவித எழுத்துத் தேர்வும் இல்லாமால், நேரடி நியமன நடைமுறையின்  மூலம் இடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
ரேஷன் கடைகளில் விற்பனையாளர் பதவிக்கு 12ம் வகுப்பு தேர்ச்சியும், கட்டுநர் பதவிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ் மொழியில் எழுதி படிக்க போதுமான திறன் பெற்றிருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. பணியில் சேர ஆர்வமுள்ளவர்கள்  அந்தந்த மாவட்டத்தில் உள்ள  கூட்டுறவுத்  துறையின் ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம்  நேர்காணல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ration shop

விண்ணப்பிக்க கடைசி நாள்

கூட்டுறவு சங்களில் காலியாக உள்ள விற்பனையாளர்கள் (Salesman) மற்றும் கட்டுநர்கள் (packer) காலி பணியிடங்களில் சேர விரும்புபவர்கள் வருகிற நவம்பர் 7ஆம் தேதி (7.11.2024) மாலை 5.45 மணி வரை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்களின் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது காலிபணியிடங்களை பொறுத்தவரை சென்னையில் 33 விற்பனையாளர் மற்றும் 315 கட்டுநர் பணியிடங்களை நிரப்பப்படவுள்ளது.

 இதே போல விருநகர் மாவட்டத்தில்  58  விற்பனையாளர், 13 கட்டுநர் பணியிடங்களை நிரப்ப இருப்பதாகவும் இதே போல அந்த அந்த மாவட்டங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப பணியாளர்கள் தேர்வு செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

click me!