10 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வேண்டுமா.! தமிழக அரசின் சூப்பர் திட்டம் - விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு

First Published Oct 9, 2024, 8:02 AM IST

தமிழ்நாடு அரசு, கிராமிய கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், 500 கலைஞர்களுக்கு தலா ரூ.10,000 நிதி உதவி வழங்குகிறது. இசைக்கருவிகள், ஆடை மற்றும் அணிகலன்கள் வாங்க இந்த நிதியுதவி வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்க விரும்பும் கலைஞர்கள் தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தில் பதிவு செய்து, விண்ணப்ப படிவத்தை 25.10.2024க்குள் அனுப்பிட வேண்டும்.

தமிழக அரசின் நிதி உதவி திட்டம்

தமிழக அரசு சார்பாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பிறந்த குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பல நிதி உதவி திட்டத்தால் பலன் அடைந்து வருகின்றனர். அந்த வகையில் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. அரசு பள்ளியில் படித்த மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வியில் படிக்கும் போது மாதம் ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் குடும்பத்தலைவிகளுக்கு மாதம், மாதம் உதவிடும் வகையில் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படுகிறது. இது மட்டுமில்லாமல் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மாதாந்திர செலவுகளை குறைக்கும் வகையில் விடியல் பயண திட்டத்தின் மூலம் இலவச பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.

பேருந்துகளில் 50% சலுகை

ஆராய்ச்சி மற்றும் உயர்கல்வி படிப்பவர்களுக்கு உதவி தொகை, நான் முதல்வன் திட்டம், திருமண உதவி திட்டம், கர்ப்பிணி பெண்களுக்கு உதவி திட்டம், சுய தொழில் தொடங்குபவர்களுக்கு நிதி உதவி திட்டம் என பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதே போல வாழ்வாதரத்தில் பின்தங்கியவர்களுக்கு உதவிடும் வகையிலும் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில்  தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகப் பேருந்துகளில் நாட்டுப் புற கலைஞர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள நாட்டுப் புற கலைஞர்கள் மற்றும் இதரக் கலைஞர்கள்  பயணம் செய்யும்போது 50 சதவிகித பயணக் கட்டணச் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

Latest Videos


10 ஆயிரம் நிதி உதவி திட்டம்

மேலும் நாட்டுப்புற கலைஞர்கள் பயணம் மேற்கொள்ளும் போது அவர்களின் இசைக் கருவிகள் மற்றும் தொழில் கருவிகளை கட்டணமில்லாமல் எடுத்துச் செல்லவும் அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  இந்தநிலையில் தமிழக கிராமிய கலைஞர்களுக்கு 10ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படவுள்ளது. இந்த நிதி உதவியை பெற உடனடியாக விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தமிழக கிராமியக் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் இசைக்கருவிகள், ஆடை மற்றும் அணிகலன்கள் வாங்கிட நபர் ஒருவருக்கு ரூ.10,000/- வீதம் 500 கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்கிடும் திட்டத்தை செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில்  உதவி தொகைக்காக விண்ணப்பிக்கும் கலைஞர்கள் தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்றவராகவும், பதிவை புதுப்பித்தவராகவும் இருத்தல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்க கடைசி நாள்

தனிப்பட்ட கலைஞர்கள் வயது 31.03.2024 தேதியில் 18 வயது நிரம்பியவராகவும், 60 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும் எனவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும்  விண்ணப்ப படிவத்தினை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தில் இலவசமாக நேரிலோ அல்லது தபாலிலோ சுயமுகவரியிட்ட உறையில் ரூ.10/-க்கான தபால் தலை ஒட்டி மன்றத்திற்கு அனுப்பி பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  விண்ணப்பித்தினை முழுமையாக பூர்த்தி செய்து 25.10.2024-க்குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி,

உறுப்பினர்-செயலாளர்
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்,
31, பொன்னி, பி.எஸ். குமாரசாமி ராஜா சாலை,
சென்னை- 600 028
தொலைபேசி: 044-2493 7471

click me!