கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து அதிமுக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய வளர்மதி, போலீசார் கைது செய்துள்ள 3 பேர் உண்மையான குற்றவாளிகளா அல்லது போலியானவர்களா என சந்தேகம்.
கோவையில் மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதன்படி கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் அதிமுக மாநில மகளிர் அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வளர்மதி தலைமையில் நடைபெற்றது. அப்போது பேசுகையில்: கோவையில் கல்லூரி மாணவி பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். அவரை பலாத்காரம் செய்தவர்கள் முள்புதரில் தூக்கி வீசி உள்ளனர். அப்போது அவர் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கதறி உள்ளார். ஆனால் அவர் குரல் யாருக்கும் கேட்கவில்லையா? அவர் கதறியும் வக்கிர புத்தி உள்ள அந்த கும்பல் அவரைவிடாமல் சீரழித்து உள்ளது. கோவை மாநகரம்? இந்த சம்பவத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை நிலைய செயலாளர் வேலுமணி ஆகியோர் கண்டித்துள்ளனர்.
24
உண்மை குற்றவாளிகளா?
அதன்படி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. போலீசார் இந்த சம்பவத்தில் துடியலூரில் வைத்து 3 குற்றவாளிகளை சுட்டுப் பிடித்ததாக கூறி உள்ளார்கள். ஆனால் அவர்களை யாருக்கும் காட்டவில்லை. அவர்கள் உண்மை குற்றவாளிகளா? அல்லது போலி குற்றவாளிகளா? என்ற சந்தேகம் உள்ளது. பாதிக்கப்பட்ட பெண் மூலம் போலீஸ் நிலையத்தில் வைத்து அந்த குற்றவாளிகளை அடையாளம் காண செய்ய வேண்டும். இந்த சம்பவத்தை அதிமுக தலைவர்கள் கண்டித்து உள்ள நிலையில் பொள்ளாச்சி சம்பவத்தில் காவலரை சென்று சந்தித்து மனு கொடுத்த கனிமொழி எம்.பி ஒன்றும் கூறவில்லை.
34
4,150 குழந்தைகள் முதல் பெண்கள் வரை பாதிப்பு
அதேபோன்று கம்யூனிஸ்ட் மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் யாரும் கண்டனம் தெரிவிக்கவில்லை. எம்.ஜி.ஆர் ஜெயலலிதா எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் ஆட்சியில் இருந்த போலீசார் தற்போது இல்லை. இப்போது ஸ்டாலின் போலீஸ் தான் உள்ளது. இதுவரை இந்த ஆட்சியில் 4,150 குழந்தைகள் முதல் பெண்கள் வரை பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த சம்பவத்தில் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும். கோவை மாநகரம் தொழில் நகரம். இங்கு ஏராளமான பேர் வந்து செல்லும் விமான நிலையத்தின் அருகிலேயே இந்த சம்பவம் நடந்து உள்ளது. இதில் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் வளர்மதி: விமான நிலையம் அருகே நடந்த சம்பவம் கண்டிக்கதக்கது. உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும். இந்த மூன்று பேரை எப்படி அடையாளம் கண்டீர்கள். அதுவும் துடியலூரிக்கு சென்று எப்படி உடனே பிடித்தீர்கள். பாதிக்கப்பட்ட பெண் மயக்க நிலையில் உள்ள போது எப்படி குற்றவாளியை கைது செய்தீர்கள். யாரையோ பிடித்து தப்பிச்சரலாம் என்று நினைக்காதீர்கள். குற்றங்களை தடுத்து நிறுத்த வேண்டும். அதிமுக சார்பாக மகளிருக்கு பல்வேறு விழிப்புணர்வுகளை கொடுத்து வருகிறோம். 60 வயது பாட்டிக்கு பெப்பர் ஸ்ப்ரே கொடுக்க வேண்டிய நிலையில் தான் தமிழகம் உள்ளது என தெரிவித்தார்.