என்ன! சென்னையில் கொலை நடந்துச்சா.. எப்போ? அதிர்ச்சியாக கேட்ட அமைச்சர்.. குவியும் கண்டனம்!

Published : Jan 29, 2026, 09:06 PM IST

ஒரு அமைச்சரே இப்படி பொறுப்பற்ற முறையில் எதுவும் தெரியாது என்று கூறியதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்தனர். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளார். 

PREV
13
சென்னையில் தொடரும் அதிர்ச்சி சம்பவங்கள்

சென்னையில் பீகாரைச் சேர்ந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டார். அவரும் அவரது கணவரும் குழந்தையும் கொடூரமாக கொல்லப்பட்டனர். இதேபோல் நந்தனம் அரசுக் கலைக்கல்லூரி வளாகத்தில் ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பங்கள் தமிழகத்தை உலுக்கின.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் ரியாக்ஷன்

இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் சென்னையில் நடந்த கொலைகள் குறித்து கேட்கப்பட்டது. இதற்கு அமைச்சர் அப்படியா? சென்னை தரமணியிலா? எப்போது? என ஒன்றும் தெரியாதது போல் ரியாக்ஷன் கொடுத்தார். 

ஒரு அமைச்சரே இப்படி பொறுப்பற்ற முறையில் எதுவும் தெரியாது என்று கூறியதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்தனர்.

23
இபிஎஸ் கடும் கண்டனம்

இந்த நிலையில், அமைச்சர் மா.சுப்பிரமணியத்துக்கு கண்டனம் தெரிவித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் தினமுய்ம் கொடுரமான பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளார். 

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் இபிஎஸ் வெளியிட்ட பதிவில், ''நந்தனம் அரசுக் கலைக்கல்லூரி வளாகத்தில் உள்ள கேண்டினில் பணிக்கு சேர்ந்த பெண் ஒருவரை, கல்லூரி வளாகத்திலேயே வைத்து கேண்டின் மாஸ்டர் மற்றும் பலர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நெஞ்சை பதற வைக்கிறது.

பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

தமிழ்நாட்டில் நாள்தோறும் கொடுரமான பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைஇந்த பொம்மை முதல்வர் மு.க.ஸ்டாலின் வேடிக்கை பார்த்து வருவது வெட்கக்கேடானது.

 சென்னையில் நேற்று பீகாரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு அவரும் அவரது கணவரும் குழந்தையும் கொடூரமாக கொல்லப்பட்ட இந்தியாவை பதைபதைக்க செய்த சம்பவத்தின் பதட்டமே இன்னும் ஓய்வுறாத நிலையில், இன்று மீண்டும் ஒரு பெண், அரசுக் கல்லூரியின் கேண்டினில் வைத்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளாரே, என்பது குறித்து கேட்டால் அப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பதே தெரியாது என்கிறார் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள்.

33
அக்கறையற்ற அமைச்சரின் பேச்சு

அக்கறையற்ற அமைச்சரின் பேச்சு வேதனைக்குரியது மட்டுமல்ல கண்டனத்திற்குரியதும் கூட. ஆயிரம் முறை நான் மீண்டும் மீண்டும் கூறிவருவதை போல திமுக ஆட்சியில் தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக மாறிப்போயுள்ளதையே இந்த தொடர் சம்பவங்கள் அழுத்தமாக நிரூபித்துள்ளது. 

இனியும் பொம்மை போன்று செயல்படாது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்த விடியா அரசின் முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்'' என்று கூறியுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories