அதாவது வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளாக வேலை இல்லாமல் இருப்பவர்கள் உதவித்தொகை பெற முடியும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற, மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மனுதாரர்கள் வரும் மார்ச் 31ம் தேதி, 45 வயதிற்குள்ளும், இதர இனத்தைச் சார்ந்தவர்கள் 40 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். மாதந்தோறும் 10ம் வகுப்பு தோல்வி அடைந்தவருக்கு ரூ. 200, தேர்ச்சி பெற்றவருக்கு ரூ.300, 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.400, பட்டதாரிகளுக்கு ரூ.600 உதவித்தொகையாக வழங்கப்படும். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு, 10ம் வகுப்பு தோல்வி, தேர்ச்சிக்கு ரூ.600, மேல்நிலை கல்வி தேர்ச்சிக்கு ரூ.750, பட்டப்படிப்பு தேர்ச்சிக்கு ரூ.1,000ம் வழங்கப்படும்.