அஜித் குமார் வழக்கில் திடீர் திருப்பம்.! அப்படினா நிகிதா சொன்னது பொய்யா? சிபிஐ விசாரணையில் சிக்கிய முக்கிய தகவல்

Published : Aug 09, 2025, 12:06 PM ISTUpdated : Aug 09, 2025, 12:24 PM IST

திருப்புவனம் அஜித்குமார் வழக்கில் சிபிஐ விசாரணையில் புதிய திருப்பங்கள். கார் சாவி விவகாரத்தில் நிகிதாவின் முரண்பட்ட வாக்குமூலம் மற்றும் சிசிடிவி காட்சிகள் புதிய சந்தேகங்களை எழுப்பியுள்ளன.

PREV
15

திருப்புவனம் அஜித்குமார் வழக்கு தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு முக்கியமான வழக்காகும். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாகப் பணியாற்றிய வந்தவர் அஜித்குமார் (வயது 29), கோயிலுக்கு வந்த நிகிதா என்பவரின் நகைகள் காணாமல் போனதாக எழுந்த புகாரின் அடிப்படையில் போலீசார் அஜித்குமாரை கைது செய்து விசாரணை நடத்தினர். 

இதில் விசாரணையின்போது சித்திரவதை செய்யப்பட்டதில் உயிரிழந்தார். விசாரணையின்போது அஜித்குமார் கடுமையாக தாக்கப்பட்டதாகவும், இதனால் அவர் உயிரிழந்ததாகவும் தெரியவந்தது. அவரது உடலில் 44 இடங்களில் காயங்கள் இருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கை தெரிவிக்கிறது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஐந்து தனிப்படை காவலர்கள் கண்ணன், ஆனந்த், ராஜா, சங்கரமணிகண்டன், பிரபு கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

25

இந்த வழக்கு முதலில் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்ற உத்தரவிட்டார். சிபிஐ தனது விசாரணையை ஜூலை மாதம் 12 ஆம் தேதி முதல் தொடங்கியது, சிபிஐ அதிகாரிகள் கைதான காவலர்களிடம் விசாரணை நடத்தினர். 

அப்போது அஜித்குமாரை சித்திரவதை செய்ய மிளகாய் பொடி பயன்படுத்தப்பட்டதாகவும், இதை மடப்புரத்தில் உள்ள ஒரு மளிகை கடையில் வாங்கியதாகவும் காவலர்கள் வாக்குமூலத்தில் தெரிவித்தனர். மேலும் அஜித்குமார் மற்றும் அவரது சகோதரரை போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தி இடங்களிலும் ஆய்வு செய்தனர். மேலும் புகார் அளித்த நிகிதாவிடமும் சிபிஐ விசாரணை நடத்தியது.

35

இந்த நிலையில் கோயிலில் கார் எப்போது பார்க்கிங் செய்யப்பட்டது. சாவியை எப்போது நிகிதாவிடம் அஜித்குமார் ஒப்படைத்தார் என்ற தகவல் சிபிஐ விசாரணையில் தெரியவந்துள்ளது. ஜூன் 27ம் தேதி காலை 9 மணிக்கு கோயிலுக்கு வந்த நிகிதா காரை பார்க் செய்து தருமாறு அஜித்குமாரிடம் கூறி சாவியை கொடுத்துள்ளார். 

அருகில் இருந்த ஆட்டோ டிரைவர் அருணிடம் சாவியை கொடுத்து காரை கோயில் எதிரே உள்ள பார்க்கிங்கில் நிறுத்தி விட்டு 5 நிமிடத்தில் சாவியை நிகிதாவிடம் அஜித்குமார் கொடுத்து விட்டார். ஆனால் நிகிதா கொடுத்த புகாரில் கார் சாவியை நீண்ட நேரம் கழித்து தந்ததாக தெரிவித்திருந்தார்.

45

மேலும் காரை அஜித்குமாரும் அவரது நண்பர் ஆட்டோ டிரைவர் அருணும் சேர்ந்து வடகரை வரை ஓட்டி வந்ததாக கூறப்பட்டது. சிபிஐ அதிகாரிகளும் முதல் நாள் விசாரணை வடகரையில் இருந்துதான் தொடங்கினர். வழிநெடுக உள்ள சிசிடிவி கேமராக்களில் கார் வந்ததாக தெரியவில்லை.

 காரை நிகிதாவே ஓட்டி சென்று, மீண்டும் அவரே ஓட்டி வரும் காட்சிகள் மட்டுமே பதிவாகி இருந்தது. மேலும் சிசிடிவி காட்சிகள், சாட்சிகளின் வாக்குமூலத்திற்கு பிறகு நிகிதாவின் காரை பார்க்கிங்கில் நிறுத்தி விட்டு 5 நிமிடத்தில் சாவியை ஒப்படைத்துள்ளனர்.

55

மீண்டும் பார்க்கிங்கில் இருந்து காரை 10 நிமிடத்தில் எடுத்து வந்து கொடுத்துள்ளனர். எனவே கோயிலுக்கு நிகிதா காரில் வந்த பின் கோயிலை விட்டு கார் வெளியே எங்கும் செல்லவில்லை என தெரியவந்துள்ளது. 20 நாட்களுக்கும் மேலாக விசாரணை நீடித்து வரும் நிலையில், தற்போது புகார் அளித்த நிகிதா முன்னுக்குப் பின் முரணான தகவல்களை அளித்தது தெரிய வந்துள்ளது. 

மேலும் நிகிதாவின் கார் பார்க்கிங்கை விட்டு வெளியே செல்லவில்லை என்ற தகவலும் தற்போது வெளியாகி உள்ளது. எனவே கோவிலில் இருந்தே நிகிதாவின் கார் எங்குமே செல்லாத நிலையில், நிகிதா அளித்தது பொய் புகாராக இருக்கலாம் என சிபிஐ அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories