தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெடிகுண்டு மிரட்டல் சம்பவம் வந்த வண்ணம் உள்ளன. அதாவது சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடு, தமிழ் திரை உலகின் முன்னணி நடிகரும், தவெக தலைவர் விஜய்யின் வீடு, நடிகை த்ரிஷா வீடு, சென்னை ஐகோர்ட்டு, டிஜிபி அலுவலகம், விமான நிலையம் மற்றும் அரசு அலுவலகங்கள், தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் மற்றும் முக்கிய இடங்களுக்கும் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டலை விடுத்துக் கொண்டே இருக்கின்றனர்.