பாஜகவுடனான கூட்டணி தொடர்பாக எனது ஆதங்கத்தை பலமுறை தெரிவித்தும் அதிமுக தலைமை கண்டு கொள்ளவில்லை. பலமுறை தன் ஆதங்கத்தை கூறியும் அவர்கள் கேட்கவில்லை. அடுத்த சாய்ஸ் திமுக தான் அதனால் தான் இணைந்தேன் என்றார். ஒரு தலைவரை நம்பித்தான் மக்கள் அந்த கட்சிக்கு வாக்களிப்பார்கள், மு.க.ஸ்டாலின் தான் மீண்டும் முதல்வர் ஆவார். அதிமுகவில் தற்போது நிலையான தலைவர்கள் இல்லை, இனி நிலையான தலைவர்கள் வருவார்களா என தெரியவில்லை. தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் இணையான தலைவர்கள் இல்லை, இம்முறைந்து 15 சதவீத கூடுதல் வாக்குகள் பெற்று திமுக வெல்லும். கருத்தியல் ரீதியாக ஒன்றாக பயணிக்க என்னை திமுகவில் இணைத்து கொண்ட முதல்வருக்கு நன்றி என அன்வர் ராஜா தெரிவித்துள்ளார்.