பாமகவில் உட்கட்சி மோதல் தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக ராமதாஸ் தரப்பில் ஒரு பிரிவினரும், அன்புமணி தரப்பில் ஒரு பிரிவினர் என இரண்டாக பிரிந்துள்ளனர். இதன் காரணமாக சட்டமன்றத்திலும் ஜி.கே.மணி மற்றும் அருள் ஆகியோர் ராமதாஸ் அணியாகவும், மற்ற 3 பேர் அன்புமணி அணியிலும் உள்ளனர்.
இதில் சட்டமன்ற கட்சி தலைவர் பதவியில் இருக்கும் ஜி.கே.மணியையும், கொறடாவாக இருக்கும் அருளையும் பதவியில் இருந்து நீக்க அன்புமணி உத்தரவிட்டிருந்தார். இது தொடர்பாக சபாநாயகருக்கும் அன்புமணி கடிதம் அனுப்பியிருந்தார். இந்த நிலையில் இருக்கை ஒதுக்கீடு தொடர்பாக அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள் சட்டசபையில் இன்றும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.