கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் பல்வேறு இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் இல்லம், சென்னை உயர் நீதிமன்ற வளாகம், சென்னை கடற்கரை ரயில் நிலையங்கள், சுங்க இல்ல தலைமை அலுவலகம் ஆகிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளது.