மாநிலக் கல்வி வாரியத்தின்கீழ் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 மாணவ, மாணவிகள் எழுதினர். இதில் மாணவியர்களின் எண்ணிக்கை : 4,19,316, மாணவர்களின் எண்ணிக்கை : 3,73,178, தேர்ச்சி பெற்றவர்கள் : 7,53,142 (95.03%) ஆகும், இதேபோல 11ஆம் வகுப்பில் 92 சதவீதம் பேரும் தேர்ச்சிபெற்றனர். இந்த நிலையில் 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளில் ஒரு லட்சத்து 218 மாணவர்கள் தோல்வியடைந்தனர். அதில், 73,820 பேர், அதாவது 71.5 சதவீதம் பேர், அரசுப் பள்ளி மாணவர்களாக உள்ளனர்.