சாவியுடன் சாலையில் நின்றிருந்த இருசக்கர வாகனத்தை திருடிய நிலையில் அதன் மூலம் மூன்று பேரும் சிக்கி உள்ளனர். பிருந்தாவன நகர் மெயின் சாலை வரை போலீசார் ரோந்து பணியில் சென்று அதன் பின்னர் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இரவு 10:30 மணி முதல் 11 மணிக்குள்ளாக பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்ததாக தெரியவந்துள்ளது. குணா(30), சதீஷ்(20), கார்த்திக்(21) ஆகிய மூன்று பேர் மீதும் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, பிடிப்பட்ட மூன்று பேரும் கூலிப்படையில் தொடர்புடைய நபர்களாக தெரியவில்லை. விசாரணைக்கு பின் தெரிய வர வாய்ப்புள்ளது. பாதிக்கப்பட்ட இளம்பெண் நல்ல உடல் நலத்துடன் உள்ளார் அவருக்கு மனநல கவுன்சிலின் தரப்படுகிறது என தெரிவித்துள்ளார்.