சாம்பியன்ஸ் டிராபியில் பும்ரா இல்லாதது இந்தியாவுக்கு பெரும் பின்னடைவாக இருந்தாலும், ஐபிஎல் 2025 சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பும்ரா மீண்டும் களமிறங்கலாம் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மார்ச் மாத இறுதியில் தொடங்கும் ஐபிஎல் சீசனுக்குள் அவர் முழு தீவிரத்துடன் பந்துவீச தயாராக இருக்கலாம் என்று நம்புகிறார்கள்.
இது கிரிக்கெட் வட்டாரங்களில் கேள்விகளை எழுப்பியுள்ளது. பும்ராவும் இந்திய அணி நிர்வாகமும் தேசிய போட்டிகளை விட ஐபிஎல் 2025க்கு எப்படி முன்னுரிமை அளிக்கலாம்? என்ற கேள்விகளை நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர். சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், ரவீந்திர ஜடேஜா, வருண் சக்கரவர்த்தி.
Jasprit Bumrah: ஸ்கேன் ரிப்போர்ட் சாதகமாக இருந்தும் பும்ராவை இந்திய அணியில் எடுக்காதது ஏன்?