பசுக்களுக்கு 2,100 கிலோ மாம்பழ ஜூஸ், 5,000 ரொட்டிகளை வழங்கிய ஹர்திக் பாண்ட்யாவின் தாய்!

Published : Apr 27, 2025, 03:51 PM IST

ஹர்திக் பாண்ட்யாவின் தாய் நளினிபென் பாண்ட்யா பசுக்களுக்கு 2,100 கிலோ மாம்பழ ஜூஸ், 5,000 ரொட்டிகளை வழங்கினார்.

PREV
14
பசுக்களுக்கு 2,100 கிலோ மாம்பழ ஜூஸ், 5,000 ரொட்டிகளை வழங்கிய ஹர்திக் பாண்ட்யாவின் தாய்!

Naliniben Pandya donates juice and rotis to cows: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவர் ஹர்திக் பாண்ட்யா. ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக உள்ளார். இவருடைய உடன்பிறந்த சகோதரர் குர்னால் பாண்ட்யாவும் இந்திய அணி வீரர் தான். இவர் ஐபிஎல்லில் ஆர்சிபி அணிக்காக விளையாடி வருகிறார். பாண்ட்யா சகோதரர்களின் தாய் நளினிபென் பாண்ட்யா.

24
Naliniben Pandya, Cows

இப்போது நளினிபென் பாண்ட்யா செய்த ஒரு செயல் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது 
நளினிபென் பாண்ட்யா, வதோதராவில் உள்ள பஞ்ச்ரபோலில் ஷ்ரவன் சேவா அறக்கட்டளை மூலம் 700 பசுக்களுக்கு 2,100 கிலோ மாம்பழ ஜூஸ் மற்றும் 5,000 ரொட்டிகளை வழங்கியுள்ளார். இந்த முயற்சி பசு நலனை மேம்படுத்துவதையும் விலங்கு பராமரிப்பில் சமூக ஈடுபாட்டை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.  ஷ்ரவன் சேவா அறக்கட்டளை பசுக்கள் மற்றும் முதியவர்களுக்கு வழக்கமான உணவை வழங்கி வருகிறது.

சாரா டெண்டுல்கருடன் டேட்டிங்கா? முதன் முறையாக மனம் திறந்து பேசிய சுப்மன் கில்!

34
Hardik Pandya, IPL

இந்த சேவையில் அவர் தனிப்பட்ட முறையில் பங்கேற்பது ஒரு பாக்கியம். இந்த செயல் அவர்களின் குடும்ப பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக செய்யப்பட்டதாக அறக்கட்டளை ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். பசுக்களின் பசியைப் போக்குவதில் பாண்ட்யாக்களின் தாய் நளினியின் சிறந்த மனப்பான்மைக்காக நெட்டிசன்கள் அவரைப் பாராட்டி வருகின்றனர். பாண்டியா சகோதரர்கள் தற்போது ஐபிஎல்லில் பிஸியாக உள்ளனர். ஹார்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாகத் தொடர்கிறார், குருணால் பாண்டியா ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடுகிறார். 

44
Krunal Pandya, Cricket

இந்த சீசனில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை அணி தற்போது ஐந்தாவது இடத்தில் உள்ளது. இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி 5 வெற்றி, 4 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்றுள்ளது. குருணால் பாண்டியா விளையாடும் ஆர்சிபி அணி மூன்றாவது இடத்தில் உள்ளது. இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள ஆர்சிபி அணி 6 வெற்றி, 3 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியையும், ஆர்சிபி அணி டெல்லி அணியையும் எதிர்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.

மழையால் மாறி போன போட்டி – 2 அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி!

Read more Photos on
click me!

Recommended Stories