வைபவ் சூர்யவன்ஷி அடுத்த U19 உலகக்கோப்பையில் ஆட முடியாது.. ஷாக் கொடுத்த பிசிசிஐ.. ஏன்?

Published : Feb 08, 2026, 11:18 PM IST

U-19 உலகக்கோப்பையில் இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக விளங்கிய 14 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷியால் அடுத்த U-19 உலகக்கோப்பையில் விளையாட முடியாது. இது ஏன் என்பது குறித்து பார்ப்போம் .

PREV
13
வைபவ் சூர்யவன்ஷி மேட்ச் வின்னர்

ஐசிசி U19 உலகக்கோப்பையில் இந்திய அணி ஆறாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. பேட்டிங், பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி கோப்பையை வென்றது. இந்தியா கோப்பையை வெல்ல வைபவ் சூர்யவன்ஷி முக்கியப் பங்காற்றினார். U-19 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 175 ரன்கள் குவித்து வைபவ் இந்தியாவின் வெற்றிக்கு உதவினார்.

23
U-19 உலகக்கோப்பையில் மாஸ் பேட்டிங்

மேலும் இத்தொடரில் ஒரு சதம், மூன்று அரைசதங்களுடன் 439 ரன்கள் எடுத்தார். U-19 உலகக்கோப்பை தொடங்குவதற்கு முன்பே வைபவ் சூர்யவன்ஷி மீது அனைவரின் பார்வையும் இருந்தது. ஏனெனில், அவர் ஆடிய அனைத்து தொடர்களிலும் சதம் அடித்து அசத்தினார். அந்த எதிர்ப்பார்ப்பை உலகக்கோப்பையில் வைபவ் சூர்யவன்ஷி.

33
2028 U-19 உலகக்கோப்பையில் ஆட முடியாது

உலகக்கோப்பையில் அசத்திய வைபவ் சூர்யவன்ஷி 2028 U-19 உலகக்கோப்பையில் ஆட முடியாது என தகவல் வெளியாகி உள்ளது. வைபவ் சூர்யவன்ஷிக்கு இப்போது 14 வயது. அடுத்த U-19 உலகக்கோப்பை 2028-ல் நடக்கும். அப்போது அவருக்கு 16 வயதுதான். ஆனாலும், பிசிசிஐ-யின் 2016 விதிமுறை அவரது கனவில் மண்ணை அள்ளிப் போட்டுள்ளது.

பிசிசிஐயின் இந்த விதி தான் காரணம்

பிசிசிஐ விதியின்படி, ஒரு வீரர் ஒருமுறை U-19 உலகக்கோப்பையில் ஆடிவிட்டால், மீண்டும் அதே தொடருக்கு தகுதி பெறமாட்டார். வயது மோசடியைத் தடுக்க 2016-ல் இந்த விதி கொண்டுவரப்பட்டது. வீரர்கள் சீனியர் அணிக்கு முன்னேற வேண்டும் என்பதற்காக இந்த விதி கொண்டுவரப்பட்டது. ராகுல் டிராவிட் 2016-ல் இந்த ஆலோசனையை வழங்கினார். எனவே இந்த விதிகளின் கீழ் 2028 U-19உலகக்கோப்பையில் வைபவ் சூர்யவன்ஷியால் ஆட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories