உலகக்கோப்பையில் அசத்திய வைபவ் சூர்யவன்ஷி 2028 U-19 உலகக்கோப்பையில் ஆட முடியாது என தகவல் வெளியாகி உள்ளது. வைபவ் சூர்யவன்ஷிக்கு இப்போது 14 வயது. அடுத்த U-19 உலகக்கோப்பை 2028-ல் நடக்கும். அப்போது அவருக்கு 16 வயதுதான். ஆனாலும், பிசிசிஐ-யின் 2016 விதிமுறை அவரது கனவில் மண்ணை அள்ளிப் போட்டுள்ளது.
பிசிசிஐயின் இந்த விதி தான் காரணம்
பிசிசிஐ விதியின்படி, ஒரு வீரர் ஒருமுறை U-19 உலகக்கோப்பையில் ஆடிவிட்டால், மீண்டும் அதே தொடருக்கு தகுதி பெறமாட்டார். வயது மோசடியைத் தடுக்க 2016-ல் இந்த விதி கொண்டுவரப்பட்டது. வீரர்கள் சீனியர் அணிக்கு முன்னேற வேண்டும் என்பதற்காக இந்த விதி கொண்டுவரப்பட்டது. ராகுல் டிராவிட் 2016-ல் இந்த ஆலோசனையை வழங்கினார். எனவே இந்த விதிகளின் கீழ் 2028 U-19உலகக்கோப்பையில் வைபவ் சூர்யவன்ஷியால் ஆட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.