2024-ல் அமெரிக்க அணியில் அறிமுகமான அவர், இப்போது அணியின் ஒரு முக்கிய அங்கமாக உள்ளார். இதுவரை 22 ஒருநாள் மற்றும் 25 டி20 போட்டிகளில் அமெரிக்காவிற்காக விளையாடியுள்ளார்.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் ஹர்மீத் தொடர்பான ஒரு சர்ச்சைக்குரிய சம்பவம் செய்தியாகி வருகிறது. வான்கடேவில் அவர் சிறப்பாக பந்துவீசுவதைப் பார்த்த ரசிகர்கள், பழைய சர்ச்சை ஒன்றையும் கிளப்பியுள்ளனர். அதாவது ஹர்மீத் சிங் முன்பு மும்பை காவல்துறையால் கைது செய்யப்பட்டது தான்.
2017ல் நடந்த சம்பவம்
2017-ல் மும்பை அந்தேரி ரயில் நிலைய நடைமேடையில் ஹர்மீத் காரை ஓட்டிச் சென்றது அப்போது பெரிய செய்தியானது. பயணிகள் நிறைந்த நடைமேடையில் அதிகாலையில் காரை ஓட்டிச் சென்றதற்காக இவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். ரயில் பாதைக்கு அருகே நிறுத்தப்பட்ட காரால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
மேலும், 2013-ல் நடந்த ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்சிங் வழக்கிலும் இவரிடம் விசாரணை நடத்தப்பட்டது, ஆனால் பின்னர் போலீசார் இவரை குற்றமற்றவர் என விடுவித்தனர். இந்த சர்ச்சைகள் அனைத்தையும் கடந்து, இன்று அமெரிக்க கிரிக்கெட்டின் சூப்பர் ஸ்டாராக ஹர்மீத் சிங் ஜொலித்து வருவது குறிப்பிடத்தக்கது.