கடைசி கட்டத்தில் வில் ஜாக்ஸ் 18 பந்துகளில் 4 சிக்சர்களுடன் 39 ரன்கள் விளாசினார். நேபாளம் சார்பில் நந்தன் யாதவ் 2 விக்கெட்டுகளையும், ஷேர் மல்லா, திபேந்திர சிங் ஐரி, சந்தீப் லமிச்சானே தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். பின்பு 185 ரன்கள் இலக்கை துரத்திய நேபாளம், குஷால் புர்டெல் மற்றும் ஆசிஃப் ஷேக்கின் அதிரடியால் 3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 31 என சிறப்பாகத் தொடங்கியது.
குஷால் புர்டெல் 17 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து நல்ல அடித்தளம் அமைத்தார். இதனைத் தொடர்ந்து கேப்டன் ரோஹித் பவுடல் மற்றும் திபேந்திர சிங் ஐரி ஆகியோர் சிறப்பாக விளையாடி இங்கிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தம் கொடுத்தனர்.
ஜோப்ரா ஆர்ச்சரின் ஓவரில் சிக்சர் மழை
திபேந்திர சிங் ஐரி 6 பவுண்டரி, 1 சிக்சருடன் 29 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார். அப்போது நேபாளம் 125/3 என்ற நிலையில் இருந்தது. அடுத்த ஓவரிலேயே கேப்டன் ரோஹித் பவுடல் (34 பந்துகளில் 39 ரன்கள்) லியாம் டாசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்ததால், நேபாளம் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
ஆனால் கடைசி கட்டத்தில் அதிரடியில் கலக்கிய லோகேஷ் பாமின் ஜோப்ரா ஆர்ச்சரின் ஒரே ஓவரில் 3 சிக்சர்களை பறக்க விட்டு நோபாள அணியை வெற்றி பக்கம் அழைத்து சென்றார்.
கடைசி 6 பந்துகளில் தலைகீழாக மாறிய ஆட்டம்
கடைசி ஓவரில் நேபாளம் அணியின் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டன. அந்த ஓவரை வீசிய சாம் கரண் யார்க்கர் பந்துகளையும், லோ புல்டாஸ் பந்துகளையும் போட்டதால் லோகேஷ் பாமினால் அடிக்க முடியவில்லை. கடைசில் ஓவரில் வெறும் 5 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்ததால் நேபாளம் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
கத்துக்குட்டியான நேபாளம் அணி பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்டு இங்கிலாந்து அணிக்கு மரண பயம் காட்டியுள்ளது. இங்கிலாந்து தரப்பில் லியாம் டாவ்சன் 2 விக்கெட்டுகளையும், சாம் கரண், லுக் வுட், ஜோப்ரா ஆர்ச்சர், வில் ஜாக்ஸ் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.