நான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடியபோது, கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு எதிராக மொஹாலியில் நடந்த போட்டி ஒன்றில், 195 ரன்கள் என்ற இலக்கை விரட்டியபோது, நான் ரன்னே அடிக்காமல் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினேன். அதன்பின்னர், ஹோட்டலின் டாப் ஃப்ளோரில் இருந்த Bar-ல் அணி வீரர்கள், பயிற்சியாளர்கள், நிர்வாகத்தினர் அனைவரும் இருந்தனர். லிஸ் ஹர்லி ஷேன் வார்னுடன் இருந்தார். அப்போது, அணி உரிமையாளர்களில் ஒருவர், ரோஸ்(டெய்லர்) நீங்கள் டக் அவுட்டாவதற்காகவா நாங்கள் கோடிகளை கொட்டிக் கொடுக்கிறோம் என்று கேட்டு என் கன்னத்தில் 3-4 அறைகளை விட்டார் என்று டெய்லர் கூறியிருக்கிறார்.