இதுகுறித்து பேசிய ரிக்கி பாண்டிங், இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரை பொறுத்தமட்டில் விராட் கோலி அவரது வழக்கமான 3ம் வரிசையில் தான் இறங்கவேண்டும். சூர்யகுமார் யாதவ் ஓபனிங், 3ம் வரிசை, 4ம் வரிசை என எந்த பேட்டிங் ஆர்டரிலும் இறங்கி ஆடவல்ல சிறந்த வீரர் ஆவார். ஆனால் என்னை பொறுத்தமட்டில் அவர் ஓபனிங்கில் இறங்கக்கூடாது. 4ம் வரிசை தான் அவருக்கு ஏற்ற பேட்டிங் ஆர்டர் என்று ரிக்கி பாண்டிங் கருத்து கூறியுள்ளார்.