இந்நிலையில், சூர்யகுமார் யாதவ் குறித்து பேசியுள்ள ரிக்கி பாண்டிங், எப்பேர்ப்பட்ட வீரரின் கெரியரிலும் ஏற்ற இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும். வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவ் மிகப்பெரிய மேட்ச் வின்னர். பெரிய போட்டிகளை ஜெயித்து கொடுக்கக்கூடிய வீரர். ஆஸ்திரேலிய அணிக்கு ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் என்ன மாதிரியான பங்களிப்பை செய்தாரோ, அதேமாதிரி பங்களிப்பை இந்திய அணிக்கு செய்யக்கூடியவர் சூர்யகுமார் யாதவ். எனவே அவரை கண்டிப்பாக உலக கோப்பையில் இந்திய அணி ஆடவைக்க வேண்டும் என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.