IPL 2023:தோனி அடித்த சிக்ஸர் விழுந்த இடத்தில் நினைவுச் சின்னம்;5 சீட்டை காலி செய்து வேலையை தொடங்கிய நிர்வாகம்!

Published : Apr 08, 2023, 12:58 PM ISTUpdated : Apr 08, 2023, 01:04 PM IST

கடந்த 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் தோனி அடித்த சிக்ஸர் விழுந்த இடத்தில் மும்பை கிரிக்கெட் வாரியம் நினைவுச் சின்னம் அமைக்கும் பணியை தொடங்கியுள்ளது. அதற்கான பணிகளை தோனி ரிப்பன் வெட்டி திறந்து வைத்துள்ளார்.  

PREV
18
IPL 2023:தோனி அடித்த சிக்ஸர் விழுந்த இடத்தில் நினைவுச் சின்னம்;5 சீட்டை காலி செய்து வேலையை தொடங்கிய நிர்வாகம்!
201

இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் ஐசிசி 50 ஓவர் கொண்ட உலகக் கோப்பை கிரிக்கெட் கோலாகலமாக நடைபெறுகிறது. டி20 உலகக் கோப்பை, ஐபிஎல், டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்று வந்தாலும் உலகக் கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் இந்த தொடர் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

28
2011 உலகக் கோப்பை சிக்ஸர்

கடந்த 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்தியா அதன் பிறகு உலகக் கோப்பையை வெல்ல போராடி வருகிறது. இந்த முறை கண்டிப்பாக உலகக் கோப்பையை கைப்பற்றி சரித்திரம் படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

38
மும்பை கிரிக்கெட் வாரியம்

கடந்த 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 ஆம் தேதி இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இறுதிப் போட்டியில் மோதின. இந்தப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. இதில், முதலில் ஆடிய இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்கள் எடுத்தது.

48
மும்பை வான்கடே ஸ்டேடியம்

இதில், அதிகபட்சமாக மகிலா ஜெயவர்தனே 103 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். இதையடுத்து ஆடிய இந்திய அணிக்கு சேவாக் (0), சச்சின் (18), காம்பிர் (97), விராட் கோலி (35) என்று ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர்.
 

58
எம் எஸ் தோனி

அதன் பிறகு தோனி மற்றும் யுவராஜ் சிங் இருவரும் ஜோடி சேர்ந்து இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்றனர். 48.2ஆவது ஓவரில் தோனி சிக்ஸர் விளாசி இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார். இந்தப் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோனி தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பையை கைப்பற்றி புதிய வரலாற்று சாதனை படைத்தது.
 

68
எம் எஸ் தொனி சிக்ஸர்

உலகக் கோப்பை வரலாற்றில் சிக்ஸருடன் பினிஷிங் செய்த முதல் வீரர் என்ற வரலாற்றையும் தோனி படைத்தார். இந்நிலையில் உலகக் கோப்பை ஃபைனலில் தோனி அடித்த சிக்சர் விழுந்த இருக்கைக்கு அவருடைய பெயரை சூட்டி கௌரவித்துள்ளது.

78
மும்பை கிரிக்கெட் வாரியம்

குறிப்பாக தோனியின் பெயர் நிரந்தரமாக பொறிக்கப்படும் அந்த இருக்கைகள் ஜே 282 முதல் ஜே 286 வரையிலான இருக்கைகள் இனி காலத்திற்கும் வேறு எந்த ரசிகரும் அமராத வகையில் நினைவுச் சின்னமாக மாற்றப்பட்ட உள்ளது.

88
2011 உலகக் கோப்பை கிரிக்கெட்

அந்த 6 இருக்கைகளை நீக்கப்பட்டு அங்கு நினைவுச் சின்னம் அமைக்கப்படவுள்ளது. அதற்கான பணிகளை சிஎஸ்கே கேப்டன் எம் எஸ் தோனி சிஎஸ்கே ஜெர்சியில் வந்து  தோனி திறந்து வைத்துள்ளார். அவருக்கு மும்பை கிரிக்கெட் வாரியம் நினைவுப் பரிசு ஒன்றையும் வழங்கியுள்ளது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories