MS Dhoni: சத்தமில்லாமல் பெரும் சாதனை படைத்த 'தல' தோனி..! சிஎஸ்கே ரசிகர்கள் குஷி..!

Published : Oct 07, 2025, 08:31 PM IST

இந்திய முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ட்ரோன் பைலட் உரிமம் பெற்றுள்ளார். தோனி மிக விரைவாக இதை கற்றுக் கொண்டதாக கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனர் தெரிவித்துள்ளார்.

PREV
14
கூல் கேப்டன் மகேந்திர சிங் தோனி

கூல் கேப்டன் மகேந்திர சிங் தோனி, டிஜிசிஏ ட்ரோன் பைலட் சான்றிதழ் திட்டத்தை முடித்துவிட்டதாக இன்று அறிவித்துள்ளார். பைக்குகள் மீதான தனது காதலை வெளிப்படையாக வெளிப்படுத்திய தோனி, தனது கிரீடத்தில் மற்றொரு மைல்கல்லைச் சேர்த்துள்ளார். அதாவது அவர் கருடா ஏரோஸ்பேஸிடமிருந்து அதிகாரப்பூர்வமாக ட்ரோன் பைலட் உரிமத்தைப் பெற்றுள்ளார்.

24
ட்ரோன் பைலட் தோனி

கடுமையான பயிற்சித் திட்டத்தை முடித்த பிறகு, தோனி இப்போது ட்ரோன்களை இயக்க சான்றளிக்கப்பட்டுள்ளார். "கருடா ஏரோஸ்பேஸ் உடன் எனது டிஜிசிஏ ட்ரோன் பைலட் சான்றிதழ் திட்டத்தை முடித்துவிட்டேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தோனி ஃபேஸ்புக் தளத்தில் தெரிவித்துள்ளார்.

கருடா ஏரோஸ்பேஸ் பிராண்ட் அம்பாசிடர் தோனி

கருடா ஏரோஸ்பேஸ் ஒரு டிஜிசிஏ-அங்கீகரிக்கப்பட்ட ரிமோட் பைலட் பயிற்சி நிறுவனம் (RPTO) ஆகும். இந்த நிறுவனம் இதுவரையில் 2,500-க்கும் மேற்பட்ட ஆர்வமுள்ள பைலட்டுகளுக்கு பயிற்சி அளித்துள்ளது. 

தோனியின் சாதனை குறித்துப் பேசிய கருடா ஏரோஸ்பேஸின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி அக்னீஷ்வர் ஜெயப்பிரகாஷ், தங்களது பிராண்ட் அம்பாசிடர் இந்தத் திட்டத்தை முடித்ததில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

34
தோனி ஒரு உத்வேகம்

"எங்கள் பிராண்ட் அம்பாசிடரும் முதலீட்டாளருமான எம்.எஸ். தோனி, தனிப்பட்ட முறையில் பயிற்சியை மேற்கொண்டு பைலட்டாக சான்றிதழ் பெற்றது எங்களுக்கு ஒரு மகத்தான மைல்கல். அவர் மிக விரைவாக அதைக் கற்றுக்கொண்டார். கற்றுக்கொள்வதில் மிகவும் கவனம் செலுத்தினார்" என்று ஜெயப்பிரகாஷ் கூறினார்.

 "ட்ரோன் துறையில் புரட்சியை ஏற்படுத்தும் எங்கள் நோக்கத்தில் அவர் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கை. எங்கள் முழு அணிக்கும் ஒரு பெரிய ஊக்கமளிக்கிறது. தோனி பாய் ஒரு உத்வேகம்'' என்றும் ஜெயப்பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

44
கிரிக்கெட்டின் சாதனை மன்னன்

பைக்குகள் மீது தனியாத காதல் கொண்ட தோனி, 2011ல் இந்திய பிராந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னல் என்ற கௌரவப் பதவியையும் பெற்றுள்ளார். இந்திய அணிக்கு 50 ஓவர் உலகக்கோப்பை, டி20 உலகக்கோப்பையை வென்று கொடுத்த ஒரே கேப்டனான தோனி, இந்தியாவுக்காக ஏராளமான சாதனைகளை படைத்துள்ளார். சிஎஸ்கேவுக்கு 5 கோப்பைகளை வென்று கொடுத்த தோனி, தன்னுடைய 44 வயதிலும் கிரிக்கெட் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories