பாகிஸ்தான் தரப்பில் தியானா பெய்க் நான்கு விக்கெட்டுகளையும், சாதியா இக்பால் மற்றும் பாத்திமா சனா தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். பின்பு பெரிய இலக்கை துரத்திய பாகிஸ்தானுக்கு மெதுவான தொடக்கமே கிடைத்தது.
நான்காவது ஓவரிலேயே தொடக்க வீராங்கனை முனீபா அலியின் (2) விக்கெட்டை பாகிஸ்தான் இழந்தது. முனீபா ரன் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து சக தொடக்க வீராங்கனை சதாஃப் ஷமாஸும் (6) ஆட்டமிழந்தார். அவர் கிராந்தியின் பந்தில் ரிட்டர்ன் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அணியை மீட்ட நதாலியா பர்வைஸ் சித்ரா
அடுத்ததாக ஆலியா ரியாஸின் (2) முறை வந்தது. இந்த முறையும் கிராந்தியின் பந்தில் செகண்ட் ஸ்லிப்பில் தீப்தியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனால் பாகிஸ்தான் 26 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. பின்பு அணியை மீட்ட நதாலியா பர்வைஸ் (33) - சித்ரா ஜோடி 69 ரன்கள் சேர்த்தது. ஆனால் பர்வைஸ் ஆட்டமிழந்ததும் பாகிஸ்தான் மீண்டும் சரிந்தது. அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்தன.