பின்பு இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய தெனனாப்பிரிக்கா அணி 49.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து இலக்கை எட்டியது. அட்டகாச சதம் விளாசிய எய்டர் மார்க்ரம் 98 பந்தில் 10 பவுண்டரி, 4 சிக்சருடன் 110 ரன்கள் விளாசினார். சிஎஸ்கே அணிக்காக விளையாடும் டெவால்ட் பிரெவிஸ் அதிரடி அரை சதம் (34 பந்துகளில் 54 ரன்) அடித்தார். இதேபோல் மேத்யூ பிரீட்ஸ்கேவியும் அரை சதம் (64 பந்துகளில் 68 ரன்கள்) அடித்தார். இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
அதிக ரன்களை சேஸ் செய்து சாதனை
இந்தியாவுக்கு எதிராக அதிக ரன்களை சேஸ் செய்த அணி என்ற சாதனையை தென்னாப்பிரிக்கா அணி ஆஸ்திரேலியாவுடன் பகிர்ந்து கொண்டுள்ளது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 1 1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.
இரு அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி வரும் 6ம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்த அணியின் பீல்டிங் மோசமாக இருந்தது தோல்விக்கு முக்கிய காரணமாகும். இதேபோல் 2வது இன்னிங்சில் பனிப்பொழிவும் இருந்ததும் இந்திய அணிக்கு பெரும் பாதகமாக மாறி விட்டது.