டெல்லி கேப்பிடல்ஸ் (DC) அணியின் வேகப்பந்து வீச்சாளரும், நியூசிலாந்து அணியை சேர்ந்தவருமான கைல் ஜேமிசன், ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியிருக்கிறார். இதற்காக, அவருக்கு ஒரு தகுதி இழப்பு புள்ளி (demerit point) வழங்கி ஐபிஎல் நிர்வாகம் எச்சரித்துள்ளது. ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடந்த 43வது போட்டியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணிக்கு எதிரான இந்தப் போட்டியின்போது, இரண்டாவது ஓவரில் வைபவ் சூர்யவன்ஷியை ஜேமிசன் அவுட்டாக்கினார். விக்கெட் எடுத்த பிறகு, பேட்ஸ்மேனை ஆத்திரமூட்டும் வகையில், அவர் அருகே சென்று ஆக்ரோஷமாக நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
பிசிசிஐ விடுத்த வார்னிங்
இது ஐபிஎல் நடத்தை விதிகளின் பிரிவு 2.5-ஐ மீறிய செயல். அதாவது, சக வீரரைச் சீண்டும் வகையிலான வார்த்தைகள், செய்கைகள் அல்லது சைகைகளைப் பயன்படுத்துவது குற்றமாகும். போட்டி நடுவர் ராஜீவ் சேத் விதித்த இந்தத் தண்டனையை, கைல் ஜேமிசன் எந்த மறுப்பும் தெரிவிக்காமல் ஏற்றுக்கொண்டார். ஒரு சர்வதேச வீராராக இருந்து கொண்டு 15 வயது சிறுவனிடம் வீரத்தை காட்டிய கைல் ஜேமிசனை நெட்டிசன்களும் கிண்டல் செய்து வருகினறனர்.