எட்ஜ்பாஸ்டன் ஆடுகளம் பெரும்பாலும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். அங்கு நல்ல வெயில் அடிக்கும் என்பதால் சுழற்பந்து வீச்சுக்கு பிட்ச் கைகொடுக்கலாம். எனவே, குல்தீப் யாதவ் சேர்க்கப்படலாம். அவர் ஸ்பின் பவிலிங்கில் அதிக வேரியேஷன் கொண்டு வருபவர். அவர் ஒரு வேகப்பந்து வீச்சாளர் அல்லது ஒரு பேட்ஸ்மேனுக்குப் பதிலாக அணியில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.
பும்ராவின் இடத்தை பிடிக்கும் அர்ஷ்தீப் சிங்
ஜஸ்பிரித் பும்ராவுக்கு பதிலாக ஆகாஷ் தீப் அல்லது அர்ஷ்தீப் சிங் அணியில் சேர்க்கப்படலாம். இதில் அர்ஷ்தீப் சிங்குக்கே அதிக வாய்ப்பு உள்ளது. ஏனெனில் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியின் மேட்ச் வின்னராக திகழும் அர்ஷ்தீப் சிங் வேகம், ஸ்லோ பால் என மாற்றி மாற்றிப் போடுவார்.
மேலும் இடதுகை பவுலர் என்பதால் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களும் எளிதில் எதிர்கொள்வது கடினம். மற்றபடி இந்திய அணியில் வேறு எந்த மாற்றங்களும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.