இதனைத் தொடர்ந்து 371 ரன்கள் இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி கடைசி நாள் முடியும் அரை மணி நேரத்துக்கு முன்பு 5 விக்கெட் மட்டுமே இழந்து இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது. இந்திய அணியின் மோசமான பீல்டிங்கும், பின்வரிசை வீரர்களின் பொறுப்பற்ற பேட்டிங்கும் தோல்விக்கு காரணமாகி விட்டது.
இதேபோல் ஒருபக்கம் ஜஸ்பிரித் பும்ரா சிறப்பாக வீசி விக்கெட்டுகளை அள்ள, மறுபக்கம் முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் விக்கெட்டுகளையும் வீழ்த்தாமல் ரன்களை வாரி வழங்கியது தோல்விக்கு பிரதான காரணமாகி விட்டது.
பந்துவீச்சு சிறப்பாக இல்லை
இந்நிலையில், இந்திய அணி வீரர் முகமது ஷமி தோல்விக்கு பவுலிங் யூனிட் சொதப்பியதே முக்கிய காரணம் என்று கூறியுள்ளார். இந்திய பந்து வீச்சாளர்கள் இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது என்று ஷமி கூறினார். ஜஸ்பிரித் பும்ராவைப் பார்த்து, அவரது திட்டமிடல் மற்றும் செயல்படுத்தல் உத்திகளைப் பார்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.