12வது ஓவரின் ஐந்தாவது பந்தில் திலக் வர்மா 25 ரன்களில் நமீபிய கேப்டன் எராஸ்மஸால் ஆட்டமிழக்க, இந்தியா அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. பின்பு ஷிவம் துபே மற்றும் ஹர்திக் பாண்ட்யா இணைந்து பெர்னார்ட் ஸ்கோல்ட்ஸின் ஓவரில் 24 ரன்கள் விளாச, இந்தியா 168/4 என ரன் குவித்தது.
18வது ஓவர் முடிவில், பாண்ட்யா மற்றும் துபே களத்தில் இருக்க, இந்தியா 199/4 ரன்களை எட்டியது. 19வது ஓவரின் முதல் பந்தில், ஹர்திக் பாண்ட்யா 27 பந்துகளில் தனது அரைசதத்தை நிறைவு செய்ய, இந்தியா 200 ரன்களைக் கடந்தது.
நமீபியா கேப்டன் சூப்பர் பவுலிங்
இருப்பினும், அடுத்த பந்திலேயே, டைலன் லீச்சர் பவுண்டரி கோட்டில் ஒரு அற்புதமான கேட்சை பிடித்து, 28 பந்துகளில் 52 ரன்கள் எடுத்த பாண்ட்யாவை ஆட்டமிழக்கச் செய்தார். ரிங்கு சிங்குடன் ஏற்பட்ட குழப்பத்தில் சிவம் துபே 23 ரன்களில் ரன் அவுட் ஆனார்.
அக்சர் படேலை கோல்டன் டக்கில் வெளியேற்றிய எராஸ்மஸ் தனது நான்காவது விக்கெட்டை கைப்பற்றினார். 20வது ஓவரில் ரிங்கு சிங் (1) மற்றும் அர்ஷ்தீப் சிங் (2) ஆகியோரை இழக்க, இந்திய அணி 209/9 ரன்கள் எடுத்தது. நமீபியா சார்பில், கேப்டன் ஜெர்ஹார்ட் எராஸ்மஸ் (4/20) நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பான பவுலிங்கை பதிவு செய்தார்.