இதுகுறித்து IPL வெளியிட்ட அறிக்கையில், "ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மேலாளர் ரவீந்தர் சிங் பிந்தர், ஏப்ரல் 10, 2026 அன்று கவுகாத்தியில் நடந்த போட்டி 16-இன் போது, BCCI IPL PMOA விதிகளை மீறியதற்காக ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறார். அணி டக்-அவுட்டில் மொபைல் போனைப் பயன்படுத்தியது, BCCI IPL PMOA விதிமுறைகளின் பிரிவு 4.1.1-க்கு முரணானது" என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், "திரு. பிந்தர் தனது தவறை ஒப்புக்கொண்டு, நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார். இது அவருக்கு முதல் முறை விதிமீறல் என்பதால், BCCI IPL PMOA விதிமுறைகளின் பிரிவு 7.42(a)-இன் படி, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் மிகவும் கவனமாக இருக்குமாறும், நிறுவப்பட்ட வழிகாட்டுதல்களைக் கண்டிப்பாகப் பின்பற்றுமாறும் அவர் எச்சரிக்கப்பட்டுள்ளார்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.