சுழற்பந்து
முதல் நாளில் முதல் ஓவரிலிருந்து இருக்குமா? அல்லது 2ஆவது நாளில் இருக்குமா என்பது தான் கேள்விக்குறி. ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தால் இந்திய அணி சுழற்பந்துவீச்சை தேர்வு செய்ய வேண்டும் என்பது முன்னாள் வீரர்களின் கருத்து.
ராகுல் டிராவிட்
மைதானம் வறண்ட நிலையில் இருக்கும் நிலையில், முதல் நாளில் முதல் ஓவரிலேயே பந்து சுழன்று வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஆனால், இதற்கு இந்திய தலைமை பயிற்சியாளர் மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி மைதானத்தில் கொஞ்சம் புற்களை வளர வைக்க மைதானம் பராமரிப்பாளர்களிடம் அறிவுறுத்தியதாக சொல்லப்படுகிறது.
மைதானம் யாருக்கு சாதகம்
எனினும், மைதானம் எப்படி என்று இன்று மாலை தான் தீர்மானிக்கப்படும் என்று கூறப்படுகிறது. நாக்பூரைப் பொறுத்தவரையில் வறண்ட வானிலை நிலவும் என்று தெரிகிறது. எனினும், பனிப்பொழுவு காரணமாக மைதானம் ஈரப்பதமாக இருக்க வாய்ப்பிருக்கிறது. இதன் காரணமாக போட்டி தொடங்கிய ஒரு அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரத்திற்கு மைதானம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று தெரிகிறது.
மைதானம் ஈரப்பதம்
மைதானம் ஈரப்பதமாக இருந்தால் பந்து ஸ்விங் ஆகாது. இப்படிப்பட்ட சூழலில் பேட்டிங்கிற்கு சாதமாக இருக்காது. இதனால், போட்டியில் டாஸ் எவ்வளவு முக்கியமோ, அந்தளவிற்கு போட்டியில் முதல் அரைமணிநேரமும் முக்கியம்.