எதிரணியை குறைத்து மதிப்பிடக்கூடாது..
இருப்பினும், கடைசி ஓவர்களில் இந்திய பந்துவீச்சாளர்கள் மீண்டும் கட்டுப்பாட்டுடன் செயல்பட்டதாகவும், அந்த ஆடுகளத்தில் 182 ரன்கள் சவாலான இலக்காக மாறிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பேட்டிங்கில் இந்தியா இலக்கை துரத்தும்போது தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் 148 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது. இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் அயர்லாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
தோல்விக்குப் பிறகும் நம்பிக்கையை இழக்காத ஐயர், அடுத்த போட்டியில் முழு ஆக்ரோஷத்துடன் களமிறங்குவோம் என்று தெரிவித்தார். "நடந்ததை மறந்து, இந்தப் போட்டியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு அடுத்த ஆட்டத்தில் அனைத்து வலிமையுடனும் திரும்புவோம்" என்றார்.
மேலும், "வெறும் மைதானத்துக்கு வந்தாலே வெற்றி கிடைக்காது. ஒவ்வொரு தருணத்திலும் கடினமாக உழைக்க வேண்டும். எதிரணியை எந்த நேரத்திலும் எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது" என்றும் ஷ்ரேயாஸ் ஐயர் வலியுறுத்தினார்.