137 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு, தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா (8) மூன்றாவது ஓவரிலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். ஆனால், யாஸ்திகா பாட்டியா (18 பந்தில் 23) மற்றும் ஷஃபாலி வர்மா ஜோடி சேர்ந்து அரைசத பார்ட்னர்ஷிப் அமைத்து, இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. அணியின் ஸ்கோர் 76 ஆக இருந்தபோது ஷஃபாலியும், 100 ரன்களை எட்டுவதற்குள் யாஸ்திகா பாட்டியா மற்றும் ரிச்சா கோஷ் ஆகியோர் ஆட்டமிழந்ததால், இந்திய அணி சற்று தடுமாறியது.
ஆனால், ஜெமிமா ரோட்ரிக்ஸ் (15 பந்தில் 26) மற்றும் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் (14 பந்தில் 13*) ஜோடி சேர்ந்து இந்தியாவை வெற்றிக்கு அருகில் கொண்டு சென்றது. வெற்றிக்கு அருகே ஜெமிமா ஆட்டமிழந்தாலும், தீப்தி ஷர்மாவுடன் இணைந்து ஹர்மன்ப்ரீத் கௌர் இந்தியாவை வெற்றி பெறச் செய்தார். இந்திய அணி 19 பந்துகள் மீதமிருந்த நிலையில் இலகக்கை எட்டிப் பிடித்தது.