மகளிர் டி20 உலகக்கோப்பை ஷஃபாலி வர்மா அதிரடி! வங்கதேசத்தை பந்தாடி இந்தியா மாஸ் வெற்றி!

Published : Jun 25, 2026, 11:15 PM IST

Women's T20 World Cup: மகளிர் டி20 உலகக் கோப்பையில் வங்கதேச அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் பந்தாடிய இந்தியா அபார வெற்றி பெற்றது. ஷஃபாலி வர்மா அதிரடி அரைசதம் விளாசி மேட்ச் வின்னராக ஜொலித்தார்.

PREV
13
மகளிர் டி20 உலகக்கோப்பை

மகளிர் டி20 உலகக்கோப்பையில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தனது வெற்றிப் பயணத்தைத் தொடர்கிறது. குரூப் சுற்றின் முக்கியமான போட்டியில், வங்கதேச அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தவிடுபொடியாக்கியது. மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்த வங்கதேச கணக்குகளை, இந்திய பந்துவீச்சாளர்கள் ஆரம்பத்திலேயே தவிடுபொடியாக்கினர்.

இந்திய அணி சூப்பர் பவுலிங்

மிகவும் துல்லியமாக பந்துவீசிய இந்திய வீராங்கனைகளுக்கு முன்னால், எதிரணி பேட்டர்கள் பெரிய ஸ்கோரை எட்டுவதற்கு திணறினர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 136 ரன்களை மட்டுமே வங்கதேச அணியால் எடுக்க முடிந்தது. இந்தியாவுக்காக சிறப்பாக பந்துவீசிய இடது கை சுழற்பந்து வீச்சாளர் ராதா யாதவ், 4 ஓவர்களில் 28 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி மிடில் ஆர்டரின் முதுகெலும்பை முறித்தார்.

23
ஷஃபாலி வர்மா அதிரடி

137 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு, தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா (8) மூன்றாவது ஓவரிலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். ஆனால், யாஸ்திகா பாட்டியா (18 பந்தில் 23) மற்றும் ஷஃபாலி வர்மா ஜோடி சேர்ந்து அரைசத பார்ட்னர்ஷிப் அமைத்து, இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. அணியின் ஸ்கோர் 76 ஆக இருந்தபோது ஷஃபாலியும், 100 ரன்களை எட்டுவதற்குள் யாஸ்திகா பாட்டியா மற்றும் ரிச்சா கோஷ் ஆகியோர் ஆட்டமிழந்ததால், இந்திய அணி சற்று தடுமாறியது.

ஆனால், ஜெமிமா ரோட்ரிக்ஸ் (15 பந்தில் 26) மற்றும் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் (14 பந்தில் 13*) ஜோடி சேர்ந்து இந்தியாவை வெற்றிக்கு அருகில் கொண்டு சென்றது. வெற்றிக்கு அருகே ஜெமிமா ஆட்டமிழந்தாலும், தீப்தி ஷர்மாவுடன் இணைந்து ஹர்மன்ப்ரீத் கௌர் இந்தியாவை வெற்றி பெறச் செய்தார். இந்திய அணி 19 பந்துகள் மீதமிருந்த நிலையில் இலகக்கை எட்டிப் பிடித்தது.

33
ஆஸ்திரேலியாவுடன் முக்கியமான போட்டி

34 பந்துகளில் 53 ரன்கள் குவித்து அதிரடி தொடக்கம் கொடுத்த தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா, ஆட்ட நாயகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம், புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ள இந்திய அணி, ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் கடைசி லீக் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்ய, இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெறுவது கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories