பிசிசிஐ வட்டாரங்களின்படி, பாண்ட்யா அதில் விளையாடுவதற்கு பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் இருந்து அனுமதி பெற்றுள்ளார். பிசிசிஐ விரைவில் டி20 தொடருக்கான அணியை அறிவிக்க உள்ள நிலையில், தேர்வாளர்கள் SMAT-ல் பாண்டியாவின் உடற்தகுதி மற்றும் செயல்திறனை உன்னிப்பாகக் கவனிப்பார்கள்.
உடற்தகுதி
ஹர்திக் பாண்ட்யா கடைசியாக ஆசியக் கோப்பையில், செப்டம்பர் 26 அன்று இலங்கைக்கு எதிரான சூப்பர் ஃபோர்ஸ் போட்டியில் இந்தியாவுக்காக விளையாடினார். இடது தொடை தசைப்பிடிப்பு காயம் காரணமாக அதன்பிறகு அவர் போட்டிகளில் பங்கேற்கவில்லை.
அவர் தனது மறுவாழ்வுப் பயிற்சியை அக்டோபர் 15 அன்று பெங்களூருவில் உள்ள பிசிசிஐ-யின் தேசிய கிரிக்கெட் அகாடமியில் தொடங்கினார். நவம்பர் 29 வரை தனது உடற்பயிற்சி முறையை மீண்டும் தொடர்ந்தார்.