இந்நிலையில், சஞ்சு சாம்சன் குறித்து பேசிய ஹர்பஜன் சிங், சஞ்சு சாம்சன் ஒரு கேப்டனாக மீண்டும் அபாரமான ஒரு இன்னிங்ஸை ஆடியுள்ளார். நான் ஏற்கனவேவும் சொல்லியிருக்கிறேன்.. இப்போதும் சொல்கிறேன்.. இந்திய அணியில் சஞ்சு சாம்சனை கண்டிப்பாக எடுக்க வேண்டும். ஸ்பின்னர்கள் மற்றும் ஃபாஸ்ட் பவுலர்கள் இருவரையுமே சிறப்பாக ஆடுகிறார். அழுத்தத்தை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று தெரிந்த வீரர் சாம்சன். தோனியை போலவே சாம்சனும் அவரது திறமை மீது நம்பிக்கை கொண்ட வீரர் என்று ஹர்பஜன் சிங் புகழாரம் சூட்டியுள்ளார்.