அர்ஷ்தீப் சிங் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்!

Published : Jan 29, 2023, 04:10 PM IST

மத்தியப்பிரதேச மாநிலத்தில் பிறந்த அர்ஷ்தீப் சிங் இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் தனது முதல் ஓவரில் ரன் ஏதும் கொடுக்காமல் மெய்டன் ஓவராக பந்து வீசியுள்ள

PREV
19
அர்ஷ்தீப் சிங் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்!
அர்ஷ்தீப் சிங்

மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள குணா என்ற பகுதியில் கடந்த 1999 ஆம் ஆண்டு பிப்ரவரி 5 ஆம் தேதி பிறந்தார். ஆனால், இவரது சொந்த ஊர் சண்டிகரில் உள்ள கரார்.
 

29
அர்ஷ்தீப் சிங் பெற்றோர்

அர்ஷ்தீப் சிங்கின் தந்தை ஓய்வு பெற்ற சிஐஎஸ்எஃப் அதிகாரி மற்றும் அவர் தற்போது டிசிஎம்மில் தலைமை பாதுகாப்பு அதிகாரி, அவரது தாயார் ஒரு இல்லத்தரசி. அவருக்கு ஒரு சகோதரனும் ஒரு சகோதரியும் உள்ளனர்.
 

39
அர்ஷ்தீப் சிங்கின் பயிற்சியாளர்

அர்ஷ்தீப் சிங்கின் பயிற்சியாளர் பெயர் ஜஸ்வந்த் ராய். சண்டிகரில் உள்ள ஜிஎன்பிஎஸ் பள்ளியில் தான் முதல் முறையாக கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தார். அப்போது அவருக்கு வயது 13.

49
இந்திய அணி

கடந்த 2018 ஆம் ஆண்டு 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பைக்கான இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டார்.

இந்தியா தோல்விக்கு அர்ஷ்தீப் சிங் காரணமா? மீண்டும் விமர்சனத்திற்கு உள்ளான நோ பால் மன்னன்!

59
UP19 சேலஞ்சர் டிராபி

கடந்த 2017 ஆம் ஆண்டு அர்ஷ்தீப் சிங் UP19 சேலஞ்சர் டிராபியில் இந்தியா ரெட் அணியால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஹாட்ரிக் நோ - பால்.. டி20 கிரிக்கெட் வரலாற்றில் மோசமான சாதனையை படைத்த அர்ஷ்தீப் சிங்

69
ரஞ்சி டிராபி

அவர் 25 டிசம்பர் 2019 அன்று ரஞ்சி டிராபியில் பஞ்சாப் அணிக்காக  அறிமுகமானார். அர்ஷ்தீப் சிங் 2022 ஆம் ஆண்டு ஜூலை 7 ஆம் தேதி ரோஸ் பவுலில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியின் மூலம் டி20 கிரிக்கெட்டில் அறிமுகமானார்.

79
அர்ஷ்தீப் சிங்

அர்ஷ்தீப் சிங் 23 வயதுக்குட்பட்ட கர்னல் சிகே நாயுடு டிராபி போட்டியில் ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளார். ராஜஸ்தானுக்கு எதிரான அந்த ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்ஸிலும் அவர் 8 ரன்கள் எடுத்தார்.

89
அர்ஷ்தீப் சிங்

கடந்த 2018 ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணியில் ஒருவராக இடம் பெற்றுள்ளார்.

Womens U19 T20 World Cup: 100 ரன்னை கூட அடிக்க முடியாமல் அரையிறுதியில் தோற்ற ஆஸி.,! இங்கிலாந்து த்ரில் வெற்றி

99
அர்ஷ்தீப் சிங்

அர்ஷ்தீப் சிங் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்திய கிரிக்கெட் அணிக்காக சர்வதேச அரங்கில் அறிமுகமானார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஓவர் மெய்டனுடன் தனது T20 கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கினார்.
 

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories