ஐபிஎல்லில் ரோஹித், சஞ்சு சாம்சன் ஆகிய கேப்டன்கள் கள நடுவர்களின் வைடு, நோ பால் முடிவுகளால் அதிருப்தியடைந்து கிண்டலாக ரிவியூ செய்த சம்பவங்கள் ஏற்கனவே அரங்கேறியுள்ளன. சில நேரங்களில் டெத் ஓவர்களில் இதுமாதிரியான, அம்பயர்களின் சில சர்ச்சை முடிவுகளால் ஆட்டத்தின் முடிவே மாறி பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அதை தடுக்கும் வகையில், இந்த விதி ஐபிஎல் மற்றும் மகளிர் பிரீமியர் லீக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.