312 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர்(64) மற்றும் சஞ்சு சாம்சன் (54) ஆகிய இருவரும் அரைசதம் அடித்தாலும், அவர்கள் பெரிய இன்னிங்ஸ் ஆடாததால், மற்ற வீரர்களும் சொற்ப ரன்களுக்கு வெளியேறியதால் 39 ஓவரில் 205 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், அக்ஸர் படேல் களத்திற்கு வந்தார்.