இதனால் ரேஷன் கடைகளில் கால்நடுக்க நின்று பணம் பெற தேவையில்லை. மக்களின் அக்கவுண்ட்வுக்கே பணம் வந்து விடும். அதே வேளையில் வங்கி விடுமுறை காரணமாக பொங்கல் பண்டிகை முடிந்த பிறகே ரூ.3,000 வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என புதுச்சேரி அரசு கூறியுள்ளது. புதுச்சேரி அரசு பொங்கல் பரிசு அறிவித்துள்ளதால் அந்த மாநில மக்கள் குஷியாகியுள்ளனர்.
ரூ.4,000ல் இருந்து ரூ.3,000க்கு இறங்கிய ரங்கசாமி
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பொங்கல் பரிசு ரூ.4,000 வழங்கப்படும் என முதலில் தெரிவித்து இருந்தார். இதற்காக ஆளுநரிடம் ரூ.140 கோடி நிதி ஒதுக்க ஆளுநரிடம் அவர் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், மாநிலத்தில் ஏற்கெனவே நிதிச்சுமை காரணமாக ஆளுநர் அதற்கு மறுத்து விட்டார். இதனால் வேறு வழியின்றி புதுச்சேரி அரசு ரூ.3,000 கொடுப்பதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.