அதன்படி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் கவுரவ ரேஷன் அட்டைதாரர்களை தவிர்த்து அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் நியாய விலைக்கடை மூலம் 5 மளிகை பொருட்கள் மற்றும் ஒரு பையுடன் கூடிய கிட் இலவசமாக வழங்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, பச்சரிசி-4 கிலோ, நாட்டு சர்க்கரை-1 கிலோ, பாசி பருப்பு-1 கிலோ, நெய்-300 கிராம், சூரியகாந்தி எண்ணெய்-1 லிட்டர், பை-1 ஆகிய பொருட்கள் நியாய விலைக்கடைகள் மூலம் விநியோகம் செய்வது அரசு கூட்டுறவு நிறுவனமான கான்பெட் மூலம் செயல்படுத்தப்படுகிறது.