ஒரு தலைவருக்கு இது கூடவா தெரியாது.. விஜய்யை கழுவி ஊற்றிய புதுச்சேரி அமைச்சர்.. என்ன விஷயம்?

Published : Dec 09, 2025, 02:39 PM IST

புதுச்சேரியில் ரேஷன் கடைகள் மாநில அரசின் கன்ட்ரோலில் இல்லை என்று பேசிய தவெக தலைவர் விஜய்க்கு அந்த மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

PREV
14
புதுச்சேரியில் விஜய்

புதுச்சேரி உப்பளம் துறைமுக வளாகத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டம் இன்று நடந்தது. கரூர் சம்பவத்துக்கு பிறகு விஜய்யின் முதல் பொதுக்கூட்டம் என்பதால் புதுவை காவல்துறையினர் மிகவும் உஷாராக இருந்தனர். பொதுக்கூட்டத்துக்கு 5,000 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். மேலும் கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியவர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஏதும் அசாம்விதங்கள் ஏற்பட்டால் மக்கள் வெளியேறுவதற்கு வசதியாக எமர்ஜென்சி எக்ஸிட்டுகளும் அமைக்கப்பட்டு இருந்தன.

24
புதுச்சேரிக்கும் சேர்த்து குரல் கொடுப்பேன்

இந்த கூட்டத்தில் பேசிய விஜய், ''அரசியல் கட்சிகள் நடத்தும் கூட்டங்களுக்கு எப்படி பாதுகாப்பு கொடுக்க வேண்டும்? என்பதை புதுவை அரசிடம் இருந்து தமிழக அரசு கற்றுக்கொள்ள வேண்டும்'' என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய விஜய், ''நான் தமிழ்நாட்டுக்கு மட்டுமில்லை; புதுச்சேரிக்கும் சேர்த்து தான் குரல் கொடுப்பேன்'' என்றார்.

ரேஷன் கடைகள் இல்லாத மாநிலம்

மேலும் பேசிய விஜய், ''புதுவை அரசுடன் கூட்டணியில் இருந்தாலும் மத்திய அரசு புதுச்சேரியை கண்டுகொள்ளவில்லை. மாநில அந்தஸ்து கோரிக்கையை கண்டுகொள்ளவில்லை. இங்கு வளர்ச்சி ஏற்படவும் துணை நிற்கவில்லை. இந்திய அளவில் ரேஷன் கடைகள் இல்லாத மாநிலம் புதுச்சேரி தான். ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரமே ரேஷன் கடைகள் தான். மற்ற மாநிலங்களை போல் இங்கும் அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட வழங்கப்பட வேண்டும்'' என்று தெரிவித்தார்.

34
இது கூட தெரியாமல் விஜய் பேசிக் கொண்டுள்ளார்

இந்த நிலையில், ரேஷன் கடைகள் குறித்து பேசிய விஜய்க்கு, புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய நமச்சிவாயம், ''புதுச்சேரியில் ரேஷன் கடைகள் மத்திய அரசின் கன்ட்ரோலில் உள்ளதா? இல்லை மாநில அரசின் கன்ட்ரோலில் உள்ளதா? ரேஷன் கடைகள் மாநில அரசு கன்ட்ரோலில் உள்ளது. இலவச அரிசி திட்டம் மாநில அரசின் ரேஷன் கடைகள் மூலமாகத்தான் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இது கூட தெரியாமல் விஜய் பேசிக் கொண்டுள்ளார்'' என்றார்.

44
விஜய்க்கு கண்டனம்

தொடர்ந்து பேசிய நமச்சிவாயம், ''மத்திய அரசுக்கு எதிராக விஜய் பேசியதை வன்மையாக கண்டிக்கிறோம். உண்மைக்கு புறம்பான தகவலை விஜய் பேசியிருக்கிறார். பாஜக அரசு தான் மாநில அந்தஸ்து கொடுக்கவில்லை என்பது போல் விஜய் பேசுகிறார். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இருந்தே மாநில அந்தஸ்து கோரிக்கை இருந்து வருகிறது'' என்று தெரிவித்தார்.

Read more Photos on
click me!

Recommended Stories