தமிழ்நாட்டில் பிளாப்… தவெக–என்.ஆர் காங்கிரஸ் கூட்டணி.. விஜய்க்கு கைகொடுக்குமா?

Published : Dec 09, 2025, 12:38 PM IST

புதுச்சேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், தவெக தலைவர் விஜய், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்காத ஒன்றிய அரசையும், தமிழக முதல்வரையும் கடுமையாக விமர்சித்தார். என்.ஆர். காங்கிரஸுடன் புதிய கூட்டணி அமையுமா என்ற அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

PREV
12
தவெக என்.ஆர் காங்கிரஸ் கூட்டணி

கரூர் மாவட்டத்தில் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற கூட்டநெரிசல் தமிழக அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த துயரச் சம்பவத்திற்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் பெரிய அளவிலான பொதுக்கூட்டங்களை நடத்துவதில் ஒருவித இடைவெளியை விட்டார் என்றே கூறலாம். பின்னர் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதால் எந்த வித குழப்பமும் ஏற்படாமல் நிகழ்ச்சி நிறைவு பெற்றது. அதே அனுபவம் புதுச்சேரியில் நடைபெற்ற சந்திப்பிற்கும் வழிகாட்டியாக அமைந்தது.

புதுச்சேரி உப்பளம் துறைமுக வளாகத்தில் நடந்த இந்த பொதுக்கூட்டத்தில், வழக்கமான மேடை அமைப்புகள் எதுவும் செய்யப்படவில்லை. விஜய் தனது பிரச்சார வாகனத்தில் நின்றபடி உரையாற்றும் நடைமுறையே பின்பற்றப்பட்டது. கரூரில் இடம்பெற்ற துயரத்தை கருத்தில் கொண்டு, காவல்துறை மிகவும் கடுமையான பாதுகாப்பு சுற்றுவலயத்தை அமைத்தது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த QR பாஸ் முறையும் அமல்படுத்தப்பட்டது.

இதில் உரையாற்றிய விஜய், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நிர்வாக ரீதியாக தனித்த பிரதேசங்களாக இருந்தாலும், மக்கள் மனதில் வேறுபாடு இல்லை வலியுறுத்தினார். தமிழ்நாட்டுக்காக மட்டுமே தனது குரல் ஒலிக்கும் என நினைப்பது தவறு, புதுச்சேரி பிரச்சினைகளுக்கும் சமமான முறையில் குரல் கொடுப்பேன் என அவர் கூறினார் தெளிவுபடுத்தினார். “எம்ஜிஆரைத் தவறவிடாதீர்கள் என முதலில் எச்சரித்தது புதுவை மக்கள் தான்,” எனவும் அவர் கூறினார்.

22
விஜய் அரசியல் பிளான்

இதே சந்திப்பில், புதுச்சேரி அரசு வழங்கிய பாதுகாப்பு ஏற்பாடுகளை பாராட்டிய விஜய், “இதைப் பார்த்து தமிழ்நாட்டின் முதல்வர் பாடம் கற்க வேண்டும். கற்றுக் கொள்ள மாட்டார்கள். அடுத்த தேர்தலில் மக்கள் முடிவு சொல்வார்கள்,” என கடுமையாக விமர்சித்தார். புதுச்சேரி ஒன்றிய அரசு புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்காதது, வேலைவாய்ப்பு வாய்ப்புகள் உருவாக்கப்படாதது, காரைக்கால் பகுதிக்கு புறக்கணிப்பு செய்யப்பட்டது என அடுக்கடுக்காக குற்றம் சாட்டினார்.

மேலும், புதுச்சேரியில் போதிய பார்க்கும் வசதிகள், கழிப்பறை அமைப்புகள் இல்லாததைச் சுட்டிக்காட்டி, “இந்த நிலைக்கு காரணம் ஒன்றிய அரசு, போதிய நிதி வழங்காததுமே” என தெரிவித்தார். ரேஷன் கடை இல்லாத ஒரே மாநிலமாக புதுச்சேரி மாறியுள்ளதை அவர் கண்டனம் செய்தார். புதுச்சேரி மக்களுக்கு எப்போதும் துணை நிற்பேன் என்றும் அவர் உறுதியளித்தார்.

இதற்கிடையில், என்.ஆர். காங்கிரஸ் மற்றும் தவெக கூட்டணி உருவாகும் சூழலில், குறிப்பாக முதலமைச்சர் ரங்கசாமியை விமர்சிக்காமல் விஜய் பேசியது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. கூட்டணியில் இருந்தாலும், “பா.ஜ.க. புதுச்சேரியை வஞ்சித்து வருகிறது” என்று கூறி அவர் புதிய கூட்டணிக்கு ஆச்சரியமான அரசியல் வரவேற்பு கொடுத்துள்ளார். இது புதுச்சேரியில் புது கூட்டணிக்கான அச்சாரமா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories