மல்லிகைப் பூ '1' வாரம் ஆனாலும்  வாடாமல் இருக்க சூப்பரான டிப்ஸ்!! 

மல்லிகைப்பூ உட்பட எந்த பூவையும் இப்படி சேமித்து வைத்தால் ஒரு வாரம் ஆனாலும் வாடாமல் பிரெஷாகவே இருக்கும்.

How To Store Jasmine Flowers In Fridge For Long Time : நம்மில் சிலருக்கு பூக்களை வாங்கி ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்து தினமும் கொஞ்சம் கொஞ்சமாக வைக்கும் பழக்கம் இருக்கும். ஆனால் அப்படி பிரிட்ஜில் வைத்து சேமிக்கும் போது இரண்டு நாளுக்குள் மல்லிகை பூ வாடி போய்விடும். ஆனால் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள சில குறிப்புகளை மட்டும் பின்பற்றினால் போதும். ஒரு வாரம் ஆனாலும் பிரிட்ஜில் வைத்து மல்லிகை பூ, வாடாமல் மொட்டாக அப்படியே இருக்கும் தெரியுமா? அது என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் இப்போது தெரிந்துகொள்ளலாம்.

how to store jasmine flowers in fridge for long time in tamil mks
ஒன்று..

முதலில் கட்டி வைத்த பூவை அழகாக சுருட்டி அதை ஒரு வாழை இலையில் வைத்து நன்றாக மடித்துக் கொள்ளுங்கள்.. முக்கியமாக வாழை இலையில் பூவை வைத்து மடிக்கும் போது அழுத்தம் கொடுக்காமல் லேசாக பேக் செய்ய வேண்டும். பிறகு ஒரு சில்வர் டப்பாவில் அதை வைத்து காற்று புகாதபடி மூடி போட்டு ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும். இப்படி சேமித்தால் ஒரு வாரம் ஆனாலும் மல்லிகை பூ வாடாமல் மொட்டாக இருக்கும்.

இதையும் படிங்க:  பச்சை மிளகாய் பிரஷ்ஷாக இருக்க வேண்டுமா? இத மட்டும் செய்யுங்க!!


இரண்டு..

ஒருவேளை உங்களுடைய வீட்டில் வாழ இல்லை என்றால், ஒரு வெள்ளை காகிதத்தில் பூவை வைத்து மெதுவாக சுருட்டி பேக் செய்ய வேண்டும். பிறகு ஒரு காட்டன் துணி பையை தண்ணீரில் நனைத்து பிழிந்து அந்த பைக்குள் பூ வைத்த பேப்பரை லேசாக சுருட்டி, பின் சில்வர் டப்பாவில் வைத்து மூடி பிரிட்ஜில் வைக்க வேண்டும். மல்லிகை பூவை எப்படி சேமித்தால் நீண்ட நாட்கள் பூ வாடாமல் இருக்கும்.

இதையும் படிங்க:  சீக்கிரம் வாடாமல் வெள்ளரிக்காய் ப்ரெஷா இருக்க சூப்பர் டிப்ஸ்!!

மூன்று..

உங்கள் வீட்டில் ஃப்ரிட்ஜ் இல்லை என்றால் ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதன் மேல் வாழை இலையை போட வேண்டும். பிறகு அதன் மேல் கட்டிய பூவை வைக்கவும். பின் ஈரமான காட்டன் துணியை நனைத்து பிழிந்து பாத்திரத்தை மூடி, சில்வர் தட்டை அதன் மேல் கவிழ்த்து வைத்தால் பூ ஒரு வாரம் ஆனாலும் வாடாமல் பிரஷ்ஷாக இருக்கும். வாழை இலையை தண்ணீரில் மிதக்க வைக்கும் போது வாழை இலைக்குள் தண்ணீர் வந்து விடக்கூடாது என்பதை பார்த்துக் கொள்ளுங்கள்.

குறிப்பு : நீங்கள் காட்டன் துணியை பயன்படுத்தும் போது அது காய்ந்து விட்டால் மீண்டும் மீண்டும் நனைத்து வைக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். மேலே சொன்ன குறிப்புகளை நீங்கள் பின்பற்றினால் நிச்சயம் மல்லிகை பூ வாடாமல் பிரஷ்ஷாக இருக்கும்.

Latest Videos

vuukle one pixel image
click me!