வாய் துர்நாற்றம் என்பது பலருக்கும் சங்கடத்தை ஏற்படுத்தும் ஒரு பொதுவான பிரச்சனை. இது நமது தன்னம்பிக்கையையும் பாதிக்கும். வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. பெரும்பாலான நேரங்களில், இது நமது வாய் சுகாதாரத்துடன் தொடர்புடையது. ஆனால் சில சமயம், வேறு சில உடல்நலப் பிரச்சனைகளும் காரணமாக இருக்கலாம்.
சரியாகப் பல் துலக்காதது: இதுதான் வாய் துர்நாற்றத்திற்கான மிக முக்கிய காரணம். நாம் சாப்பிடும் உணவுத் துகள்கள் பற்களுக்கும், ஈறுகளுக்கும் இடையில் சிக்கிக்கொள்ளும். இந்த உணவுத் துகள்களை பாக்டீரியாக்கள் சிதைக்கும்போது, துர்நாற்றத்தை உருவாக்கும் வாயுக்கள் வெளிப்படும்.
நாக்கைச் சுத்தம் செய்யாதது: நாக்கின் மேற்பரப்பில் எண்ணற்ற பாக்டீரியாக்கள் மற்றும் இறந்த செல்கள் ஒட்டிக்கொண்டிருக்கும். இவை நாற்றத்தை ஏற்படுத்தும். உமிழ்நீர் குறைவாக சுரக்கும்போது பாக்டீரியாக்கள் பெருகி துர்நாற்றத்தை உருவாக்கும்.
ஈறு நோய்கள் மற்றும் பல் சொத்தை: ஈறுகளில் ஏற்படும் வீக்கம், ரத்தம் வருதல் அல்லது பற்களில் ஏற்படும் சொத்தைகள் பாக்டீரியாக்கள் வளர சிறந்த இடமாக அமைகின்றன. இந்த பாக்டீரியாக்களும் துர்நாற்றத்தை உருவாக்கும்.
குடல் பிரச்சனைகள், கல்லீரல் அல்லது சிறுநீரக பிரச்சனைகள், சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்திருக்காத சிலருக்கு, போன்றவை வாய் துர்நாற்றத்திற்குக் காரணமாகலாம்.