வீட்டில் சுத்தம் செய்ய வேறு பொருட்கள் எதுவும் இல்லைன்னா, சுடுதண்ணீர் மற்றும் ஈனோவை வைத்து முயற்சி செய்யலாம். கறிகளை நீக்க, ஒரு பாக்கெட் ஈனோவை சுடுதண்ணீரில் கலக்குங்க. இந்த கரைசலில் பர்னரை சுமார் 15-20 நிமிஷம் ஊறவைங்க. பிறகு, பிரஷ் வைத்து தேய்த்து சுத்தம் செய்யுங்க. பயன்படுத்துவதற்கு முன்பு பர்னரை முழுவதுமாக உலர வைப்பது ரொம்ப முக்கியம்.
அடைபட்ட துளைகளை நீக்க ஊசி / பாப் பின் பயன்பாடு
பர்னர்களை ஊறவைத்துத் தேய்த்த பிறகும், அதன் சிறிய துளைகளில் அழுக்கு அல்லது சோப்புத் துகள்கள் அடைத்திருக்கலாம். இவற்றை நீக்க ஒரு சிறிய பாப் பின் ஊசி அல்லது மெல்லிய கம்பியைப் பயன்படுத்தித் துளைகளைக் குத்தி அடைப்பை நீக்கலாம். இது எரிவாயு சீராக எரியவும், நீல நிறச் சுடர் வரவும் உதவும்.
மஞ்சள் தூள் மற்றும் உப்பு கரைசல்
இரசாயனங்கள் அல்லது ஈனோ இல்லாத பட்சத்தில், சுடுநீரில் 2 ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 1 ஸ்பூன் கல் உப்பு கலந்து பர்னரை 20 நிமிடங்கள் ஊறவைத்துத் தேய்க்கலாம். இது கிருமிகளை அழிப்பதோடு, பிசுபிசுப்பையும் எளிதில் போக்கும்.