கோடைக்காலம் வந்தாலே பகல்ல வேர்வை, ராத்திரில தூக்கமின்மைனு பெரிய போராட்டமா இருக்கும். எவ்வளவு களைப்பா இருந்தாலும், உடம்பு சூடும் மன அழுத்தமும் தூக்கத்தை விரட்டிடும். ஃபேன், ஏசி காத்து உடம்புக்கு வெளியில குளிர்ச்சியைக் கொடுத்தாலும், உள்ளுக்குள் இருக்கும் சூட்டைக் குறைக்காது. இந்த நேரத்துல, மார்க்கெட்ல கிடைக்கிற கெமிக்கல் கலந்த பொருட்களை விட, நம்மளோட பழைமையான ஆயுர்வேதம் சொல்ற 'சந்தனத்தை' பயன்படுத்துறதுதான் பெஸ்ட்.
26
அற்புதமான மாற்றத்தை உணரலாம்
சந்தனம் வெறும் பூஜைக்கோ, அழகுக்கோ மட்டும் இல்லை. அது இயற்கையாகவே உடலைக் குளிர்ச்சியாக்கி, மனசை அமைதிப்படுத்தும் சக்தி கொண்டது. ராத்திரி தூக்கம் வராம அவதிப்படுறவங்க, நெற்றியிலயும், பாதங்கள்லயும் சந்தனத்தைப் பூசினா, அற்புதமான மாற்றத்தை உணரலாம்னு ஆயுர்வேத நிபுணர்கள் சொல்றாங்க.
36
நரம்புகள் உடனே அமைதியாகி, மனசு நிம்மதியாகும்
நம்ம இரண்டு புருவங்களுக்கு நடுவுல இருக்குற பகுதியை ஆயுர்வேதத்துல 'ஆக்ஞா சக்கரம்' அல்லது 'மூன்றாவது கண்'னு சொல்வாங்க. இது நம்ம நரம்பு மண்டலத்தோட மையப்புள்ளி. நாள் முழுக்க வேலை செஞ்ச டென்ஷன், கவலை, யோசனைகள் எல்லாம் மூளையோட நரம்புகளை சூடாக்கிடும். ராத்திரி தூங்குறதுக்கு முன்னாடி நெற்றியில சந்தன பேஸ்ட்டை அப்ளை பண்ணினா, நரம்புகள் உடனே அமைதியாகி, மனசு நிம்மதியாகும். இதனால நல்லா தூக்கம் வரும்.
சந்தனத்தோட இயற்கையான குளிர்ச்சி குணம், உடம்போட மொத்த சூட்டையும் சமநிலைப்படுத்தும். நெற்றியில இதைத் தடவும்போது, தலைவலி குறைஞ்சு, ஆழ்ந்த தூக்கம் வரும். சரி, பாதங்கள்ல ஏன் சந்தனம் தடவணும்? ஆயுர்வேதத்தின்படி, உடம்புல இருக்குற அதிகப்படியான சூடு, உள்ளங்கால்கள் வழியாதான் வெளியேறுமாம். பாதம் குளிர்ச்சியா இருந்தா, முழு உடம்பும் ரிலாக்ஸ் ஆகிடும்.
56
அடிக்கடி தூக்கம் கலையுற பிரச்சினை தீரும்
வெயில் காலத்துல நிறைய பேருக்கு பாதங்கள்ல பயங்கர எரிச்சல் இருக்கும். ராத்திரி தூங்குறதுக்கு முன்னாடி உள்ளங்கால்ல சந்தன பேஸ்ட்டை தடவி மசாஜ் செஞ்சா, சில நிமிஷத்துலயே எரிச்சல் குறையும். பாதங்கள்ல மசாஜ் செய்யும்போது, ரத்த ஓட்டம் சீராகி, உடம்புக்கு உடனடி ஓய்வு கிடைக்கும். இதனால, ராத்திரில அடிக்கடி தூக்கம் கலையுற (Sleep Interruption) பிரச்சினையும் தீரும்.
66
குழந்தை மாதிரி நிம்மதியா தூங்குங்க
மார்க்கெட்ல கிடைக்கிற சந்தனப் பொடியை விட, சுத்தமான சந்தனக் கட்டையை உரைச்சு பேஸ்ட் செய்யுறதுதான் அதிக பலன் தரும். சந்தன பேஸ்ட்டோட கொஞ்சம் ரோஸ் வாட்டர் (பன்னீர்) கலந்துக்கங்க. இதை நெற்றியிலயும், உள்ளங்கால்கள்லயும் தடவி ஒரு 10-15 நிமிஷம் அப்படியே விடுங்க. பேஸ்ட் காஞ்சதும், குளிர்ச்சியான தண்ணியில கழுவிட்டு தூங்கப் போங்க. இந்த எளிமையான, இயற்கையான முறை உங்களை 'இன்சோம்னியா' எனப்படும் தூக்கமின்மையிலிருந்து காப்பாற்றும். இந்த கோடைக்கு, கெமிக்கல் இல்லாத இந்த ஆயுர்வேத முறையைப் பின்பற்றி, குழந்தை மாதிரி நிம்மதியா தூங்குங்க.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.