துணிகளைத் துவைக்கும் வாஷிங் மெஷினிலும் அழுக்கும் துர்நாற்றமும் சேரும். இதனால் துணிகள் சுத்தமாகாமல் பழசு போலவே இருக்கும். இந்தத் தொல்லையை நீக்கி, மெஷினை மிக எளிதாகச் சுத்தம் செய்வதற்கான சில எளிய ரகசிய வழிகள் இதோ!
பாதி எலுமிச்சம்பழத்தின் மீது சிறிதளவு டூத்பேஸ்ட் (Toothpaste) தடவி, அதை வாஷிங் மெஷினின் உள்பகுதியில் நன்றாகத் தேய்க்கவும். பிறகு, வெறும் தண்ணீரை மட்டும் ஓடவிட்டால் (Empty Cycle), உள்பகுதி பளிச்சென்று மாறுவதோடு எலுமிச்சையின் நறுமணமும் வீசும்.
26
மவுத்வாஷ் திரவ மேஜிக் :
வாய் கொப்பளிக்கப் பயன்படுத்தும் மவுத்வாஷ் (Mouthwash) திரவத்தில் இரண்டு மூடி எடுத்து, டிடர்ஜென்ட் போடும் பாக்ஸில் ஊற்றுங்கள். மெஷினை 'குவிக் வாஷ்' (Quick Wash) மோடில் இயக்கினால், உள்ளே மறைந்திருக்கும் கண்ணுக்குத் தெரியாத பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள் முழுமையாக அழிந்துவிடும்.
36
ஆப்பிள் சீடர் வினிகர்:
முன் பக்கக் கதவு கொண்ட மெஷின்களின் (Front Load) ரப்பர் வளையத்தில் தான் அதிக அழுக்கு தேங்கும். ஆப்பிள் சீடர் வினிகரில் (Apple Cider Vinegar) நனைத்த பருத்தித் துணியைக் கொண்டு இந்த ரப்பர் பகுதியைத் துடைத்தால், அங்குள்ள கருப்பு நிறக் கரைகள் உடனடியாக மறைந்துவிடும்.
சோப்புத்தூள் போடும் பாக்ஸை தனியாகக் கழற்றி, மிதமான சுடுதண்ணீரில் சிறிது சமையல் சோடா (Baking Soda) கலந்து 10 நிமிடங்கள் ஊற வையுங்கள். அதன் பின் பழைய பிரஷ் கொண்டு விளக்கினால், உறைந்து போயிருக்கும் சோப்புக் கட்டிகள் நீங்கிப் புதுசு போல மாறும்.
56
தேங்கியிருக்கும் குப்பைகளை அகற்றுங்கள்
ஆடைகளில் இருந்து வெளியேறும் நூல் இழைகள் மற்றும் நாணயங்கள் மெஷினின் கீழ் பகுதியில் இருக்கும் ஃபில்டரில் தான் தங்கும். மாதத்திற்கு ஒருமுறை இந்த ஃபில்டரைத் திறந்து, அதில் தேங்கியுள்ள குப்பைகளை அப்புறப்படுத்தினால் மெஷினின் ஆயுள் பல ஆண்டுகள் நீடிக்கும்.
66
துர்நாற்றத்தைத் தடுக்கும் எளிய வழி
துணிகளைத் துவைத்து முடித்த உடனே வாஷிங் மெஷினின் கதவை மூடக் கூடாது. குறைந்தது அரை மணி நேரமாவது அதன் கதவைத் திறந்து வைத்தால், உள்ளே இருக்கும் ஈரப்பதம் உலர்ந்து, பூஞ்சை காளான் உருவாவது முற்றிலும் தடுக்கப்படும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.