உயர் இரத்த அழுத்தம் என்பது தற்போது ஒரு பொதுவான நோயாக மாறிவிட்டது. மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகள் தான் இதற்கு காரணமாகின்றன. சிறிது கவனக்குறைவு ஏற்பட்டால் கூட இந்த நோயால் மரணம் கூட நிகழலாம். உயர் இரத்த அழுத்தம் காரணமாக மாரடைப்பு, இதயம் செயலிழப்பு, சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் அதிகரிக்கும். எனவே இந்த நோய் தொடர்பான அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் அதன் தீவிரத்தை குறைக்கலாம். சரி இப்போது நீங்கள் தினமும் காலையில் எழும்போது இந்த 5 அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருக்கிறது என்று அர்த்தம். அவை என்னென்னவென்று இங்கு பார்க்கலாம்.