மனிதனின் உயிரியல் கடிகாரம் (சர்க்காடியன் ரிதம்) அவனை குறிபிட்ட நேரத்தில் தூங்கி, எழும் வகையில்தான் இயங்குகிறது. அதாவது சேவல் எப்படி அதிகாலையில் கூவுகிறதோ அதைப் போல மனிதனும் குறிப்பிட்ட நேரத்திற்கு தினமும் காலை எழுந்தால், ஒவ்வொரு நாளும் அதே நேரத்திற்கு விழிப்பான். ஆனால் இங்கு தூங்குவது ஒரு நேரம், எழுவது ஒரு நேரம் என்பதால் பலருக்கும் அலாரம் தேவைப்படுகிறது. ஆனால் அலாரம் வைப்பது கூட மனித உடலுக்கு ஆபத்தில் வந்து முடிகிறது. ஏன் நிபுணர்கள் காலை அலாரம் வைப்பது ஆபத்தானது எனச் சொல்கிறார்கள் என இந்தப் பதிவில் காணலாம்.