- நீங்கள் நின்று கொண்டு சாப்பிடும் போது புவி ஈர்ப்பு விசை காரணமாக உங்களது கால்களில் இரத்தம் தேங்கி இருக்கும். இதனால் செரிமான மண்டலத்திற்கு பாயும் இரத்தத்தின் அளவு குறைந்து விடும். இதனால் உணவானது சரியாக உடையாமல் போகும். இதன் விளைவாக வாயு, வீக்கம், அஜீரணம் உண்டாகும்.
- அதுபோல நின்று கொண்டு சாப்பிடும் போது விரைவாக சாப்பிடுவோம். இதனால் அதிகப்படியான காற்றை விளங்கி விடுவோம். இதனால் வாயு தொல்லை, அசெளகரியம் மேலும் அதிகரிக்கும்.
- அதுமட்டுமின்றி உணவே சரியாக மென்று சாப்பிடாவிட்டால் வயிற்று பிடிப்பை ஏற்படுத்தும். மேலும் உணவு ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும். எனவே இந்த பிரச்சனைகளை தவிர்க்க உணவை மெதுவாகவும், நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.
- நின்று கொண்டு சாப்பிடுவதால் வயிற்று உப்புசம் ஏற்படும். குறிப்பாக கார்போஹைட்ரேட் உணவுகள் வீக்கம் மற்றும் வாயுவை ஏற்படுத்தும்.