1. செரிமானத்திற்கு நல்லது - காலையில் வெறும் வயிற்றில் சூடான நீரை குடித்தால் உடலில் செரிமான நொதிகளை ஊக்குவித்து செரிமானத்தை துரிதப்படுத்தும். மேலும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி செரிமான உறுப்புகள் சிறந்த முறையில் செயல்பட உதவும். இதன் விளைவாக மலச்சிக்கல், வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புகள் குறையும்.
2. உடலை நச்சு நீக்கும் - வெறும் வயிற்றில் சூடான நீரை குளிப்பது மூலம் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றப்படும் என்று ஆய்வு மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. உடலில் போதுமான அளவு தண்ணீர் இருந்தால் நச்சுக்களானது வியர்வை மற்றும் சிறுநீர் வழியாக வெளியேறும்.
3. இரத்த ஓட்டம் மேம்படும் - காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுபான நீரை குடித்தால் இரத்த நாளங்கள் விரிவடைந்து இரத்த ஓட்டம் மேம்படும். அதுமட்டுமில்லாமல் செல்கள் மற்றும் திசுகளுக்கு தேவையான ஆக்ஸிஜனும் கிடைக்கும்.
4. வலி நிவாரணம் - வெதுவெதுப்பான நீரானது தசைகளை தளர்த்தி வலியை போக்க பெரிதும் உதவுகிறது.